காலாவதி பொருட்களைப் பயன்படுத்தும் The Rameshwaram Cafe..ஹைதராபாத்தில் உணவு பாதுகாப்புத் துறை சோதனை..!

பெங்களூரின் மிக பிரபலமான ராமேஸ்வரம் கஃபே, சமீபத்தில் தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் மாதாப்பூர் பகுதியில் இவர்களது கிளை அண்மையில் திறக்கப்பட்டது. இந்நிலையில், தெலுங்காணா உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேற்று (மே 23) திடீர் சோதனை நடத்தினர். அப்போது அதிர்ச்சியளிக்கும் பல விஷயங்கள் வெளிச்சத்திற்கு வந்து மட்டும் அல்லாமல் ராமேஸ்வரம் கஃபே-வின் பிராண்ட் மதிப்பில் பெரிய ஓட்டை விழுந்தது.

சோதனையில், ஹோட்டலின் சமையலறையில் காலாவதியான மற்றும் லேபிள் இல்லாத உணவுப் பொருட்கள் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டது.

காலாவதி பொருட்களைப் பயன்படுத்தும்The Rameshwaram Cafe..ஹைதராபாத்தில் உணவு பாதுகாப்புத் துறை சோதனை..!

சுமார் 100 கிலோ கடலைப்பருப்பு (₹16,000 மதிப்பு), 10 கிலோ நந்தினி தயிர் மற்றும் 8 லிட்டர் பால் ஆகியவை அவற்றின் காலாவதி தேதியைக் கடந்து பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டிருந்தன. மேலும், 450 கிலோ அரிசி, 20 கிலோ வெள்ளை லோபியா மற்றும் 300 கிலோ லேபிள் இல்லாத வெல்லம் ஆகியன முறையற்ற முறையில் சேமிக்கப்பட்டிருந்ததை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இவை அனைத்தையும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுமட்டுமின்றி, உணவு தயாரிப்பாளர்களுக்கான கட்டாய மருத்துவ தகுதிச் சான்றிதழ்களையும் ஹோட்டல் நிர்வாகம் வழங்கவில்லை. மேலும், உணவு பாதுகாப்பு விதிமுறைகளின்படி குப்பைகளை மூடுவதற்கான மூடிகளைக் கூட பயன்படுத்தவில்லை என்பதும் கண்டறியப்பட்டது.

ஹைதராபாத்தில் உள்ள பல்வேறு உணவகங்களில் சுகாதார தரநிலைகளில் குறைபாடுகள் இருப்பதைக் கண்டறிந்த உணவு பாதுகாப்புத் துறை மேற்கொண்ட நடவடிக்கையில் இதுவும் ஒன்று.

அதே நாளில், பாகுபலி கிச்சன் என்ற மற்றொரு உணவகத்திலும் திடீர் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில், சேமித்து வைக்கப்பட்டிருந்த உணவுப்பொருட்களில் கரப்பான் பூச்சிகள் நிறைந்திருப்பதைக் கண்டறிந்தனர். அந்த ஹோட்டலின் சுகாதார நிலை மிகவும் மோசமாக இருந்தது. இதனைத் தொடர்ந்து, பாகுபலி கிச்சன் உரிமையாளருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

நெய் தோசை மற்றும் இட்லி ஆகியவற்றுக்குப் பெயர் பெற்ற ராமேஸ்வரம் கஃபே ஹோட்டல், இந்த ஆண்டு தொடக்கத்தில் ஹைதராபாத்தின் மாதாப்பூர் பகுதியில் தனது கிளையை திறந்தது. பல பிரபலங்களும் உணவு ஆர்வலர்களும் வந்து செல்லும் இந்த ஹோட்டலுக்கு மக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் நல்ல பெயர் இருந்து வருகிறது.

ஆனால், இந்த உணவு பாதுகாப்பு மீறல், அதன் நற்பெயர் மீது கரும்புள்ளியாக உள்ள. இதனைத் தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள இவர்களது குண்டலஹள்ளி கிளையில் மார்ச் 1 ஆம் தேதிக் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்து பலர் காயமடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து தற்போது இக்கிளை முழு செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+