தமிழ்நாட்டின் விஸ்வரூப வளர்ச்சிக்கு இணையாக மாநிலம் முழுவதும் பல தொழில்துறை பகுதிகள் உருவாகி வரும் வேளையில், ராணிப்பேட்டை மிகவும் முக்கியமானதாக மாறி வருகிறது. திடீரென ராணிப்பேட்டை ஓசூர், ஸ்ரீபெரும்புதூர்-க்கு இணையாக ஒப்பிடப் பல முக்கியமான காரணம் இருந்தாலும். இதற்கு பிள்ளையார் சுழிப்போட்டது சிப்காட்-ம் டாடா-வும் தான்.
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பாளரான டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் தனது வெளிநாட்டுக் காப் பிராண்டான ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் கார்களை தயாரிக்க ராணிப்பேட்டையில் 9,000 கோடி ரூபாய் முதலீடு செய்து புதிய தொழிற்சாலையை அமைக்க உள்ளதாக அறிவித்தது.

இதே ஆட்டோமொபைஸ் துறையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களைத் தயாரிக்க ராணிப்பேட்டையில் 700 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலையை அமைத்த கிரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டி, தற்போது அதை வருடத்திற்கு 10 லட்சம் வாகனங்கள் வரையில் உற்பத்தி செய்யும் வகையில் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் ராணிப்பேட்டை தற்போதைய சூழ்நிலையில் ஒரு ஆட்டோமொபைல் ஹைப் ஆக மாறி வருகிறது. இதற்கு ஏற்றார் போல் ராணிப்பேட்டை-யின் இருப்பிடம் தொழிற்துறைக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது. தமிழ்நாட்டின் மிக இளம் மாவட்டங்களில் ஒன்று தான் ராணிப்பேட்டை 2019ல் தான் தனி மாவட்டமாக உருவானது. இது தமிழ்நாட்டின் 36வது மாவட்டமாகும்.
ராணிப்பேட்டை-யின் இருப்பிடத்தைப் பார்க்கும் போது இது காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை ஓட்டியுள்ளது, இவ்விரு தொழில்துறை மாவட்டங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இங்கு ரியல் எஸ்டேட் விலை மிகவும் குறைவு. இதனாலேயே பல முதலீட்டாளர்கள் ராணிப்பேட்டையைத் தேர்வு செய்கின்றனர்.
முதலீட்டை பெற ரியல் எஸ்டேட் விலை மட்டும் போதுமா..? நிச்சயமில்லை. ராணிப்பேட்டை சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலை மற்றும் புதிய சென்னை-பெங்களூரு இண்ட்ஸ்ட்ரியல் காரிடார் (CBIC) ஆகியவற்றிற்கு இடையே அமைந்துள்ளது. இதுதான் புதிய முதலீடுகளை பெற முக்கிய காரணமாக உள்ளது.
கூடுதலாக ராணிப்பேட்டை உடன் காட்பாடி மற்றும் அரக்கோணம் ரயில்வே சந்திப்புடன் சிறப்பான முறையில் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், ராணிப்பேட்டை-க்கு அருகில் இருக்கும் சென்னை-பெங்களூரு இண்ட்ஸ்ட்ரியல் காரிடார் சென்னை, எண்ணூர் மற்றும் கட்டுப்பள்ளி துறைமுகங்களுடன் நேரடியாக இணைக்கிறது. கூடுதலாக, தற்போது வரும் பாரந்தூர் விமான நிலையம் அருகில் உள்ளது. இப்படி சாலை, ரயில், விமானம் என 3 போக்குவரத்திலும் இணைக்கப்பட்டு உள்ளதால் உற்பத்தியாளர்களுக்கு ராணிப்பேட்டை வரப்பிரசாதமாக உள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications