ராணிப்பேட்டை: இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் செயல்பட்டு வருகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஆடம்பர கார் பிராண்டுதான் ஜாகுவார் லேண்ட் ரோவர்.
தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருக்கும் பனப்பாக்கம் சிப்காட்டில் டாடா மோட்டார்ஸ் தன்னுடைய ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களை உற்பத்தி செய்வதற்கான ஆலையை கட்டமைத்து வருகிறது. இந்த ஆலையில் எப்போது முதல் கார்களின் உற்பத்தி மற்றும் ஒருங்கிணைப்பு தொடங்கும் என்ற தகவலை டாடா மோட்டார்ஸ் வெளியிட்டு இருக்கிறது. ராணிப்பேட்டையில் சுமார் 9,000 கோடி ரூபாயை முதலீடு செய்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வாகன உற்பத்தி ஆலையை நிறுவி வருகிறது .

இந்த ஆலையில் டாடா நிறுவனத்திற்கு சொந்தமான கார்களும் மற்றும் டாடாவின் ஆடம்பர பிராண்டான ஜாக்குவார் லேண்ட் ரோவர் ரக கார்களும் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. ராணிப்பேட்டையில் கட்டமைக்கப்பட்டு வரக்கூடிய இந்த ஆலையில் படிப்படியாக உற்பத்தி தொடங்கப்படும் என டாடா மோட்டார் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. அடுத்த ஐந்து இருந்து ஏழு ஆண்டுகளுக்குள் இந்த ஆலை தன்னுடைய முழுமையான உற்பத்தி திறனை எட்டிவிடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஒரு ஆண்டுக்கு 2,50,000 கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இந்த ஆலை இருக்கும் என டாடா மோட்டார்ஸ் கூறியிருக்கிறது. இதனிடையே டாடா மோட்டார்ஸ் நிறுவன மூத்த அதிகாரிகள் எக்னாமிக் டைம்ஸ் தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் ராணிப்பேட்டை உற்பத்தி ஆலையில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களை உற்பத்தி செய்யும் பணி 2026 ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே தொடங்கும் என தெரிவித்திருக்கிறார்கள்.
முதல் கட்டமாக ரேஞ்ச் ரோவர் ஈவோக் மற்றும் ரேஞ்ச் ஓவர் வெலார் ஆகிய இரண்டு கார்களும் இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படும். டாடா நிறுவனம் மூலம் 2011 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் ஜாகுவார் லேண்ட் ரோவர் பிராண்ட் கார்களை உற்பத்தி செய்கிறது. இந்த காருக்கான பாகங்கள் அனைத்தையும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து இந்தியாவில் அதனை காராக ஒருங்கிணைத்து விற்பனைக்கு கொண்டு வருகிறது.
ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்களில், ரேஞ்ச் ரோவர் மற்றும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட்ஸ் ஆகிய கார்களை டாடா நிறுவனம் மகாராஷ்டிராவில் இருக்கும் தங்களுடைய உற்பத்தி ஆலையில் சொந்தமாக தயாரிக்கிறது . ரேஞ்ச் ரோவர் ஈவோக் மற்றும் ரேஞ்ச் ஓவர் வெலார் ஆகிய இரண்டு கார்களையும் பாகங்களை இறக்குமதி செய்து ஒருங்கிணைக்கு விற்பனை செய்கிறது. ராணிப்பேட்டையிலும் முதல்கட்டமாக கார் பாகங்களை ஒருங்கிணைக்கும் பணிகளையே மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இந்த பணி அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications