சென்னை: இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுமார் 300 சிறிய வங்கிகளின் வாடிக்கையாளர்கள் ஏடிஎம்களில் பணம் எடுப்பது, யுபிஐ பயன்பாடு உள்ளிட்ட பண பரிமாற்ற சேவைகளைப் பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த இக்கட்டான நிலைக்கு முக்கியமான காரணம் இந்த 300 சிறிய வங்கிகளுக்கு டிஜிட்டல் வங்கி சேவை அளிக்கும் டெக் நிறுவனமான சி-எட்ஜ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் ஏற்பட்ட ரான்சம்வேர் சைபர்செக்யூரிட்டி தாக்குதல் ஏற்பட்டு உள்ளது தான்.
சி-எட்ஜ் நிறுவனத்தின் டிஜிட்டல் வங்கி சேவையை சார்ந்து செயல்படும் கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராமப்புற வங்கிகளின் வாடிக்கையாளர்கள் இந்த பிரச்சனையை சந்தித்து வருகின்றனர். இதேவேளையில் மற்ற வங்கி சேவைகள் இயல்பாக செயல்பட்டு வருவதாகவும் வங்கித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்திய கூட்டுறவு யூனியன் தலைவர் திலீப் சங்கானி, குஜராத்தில் உள்ள 17 மாவட்ட கூட்டுறவு வங்கிகள் உட்பட இந்தியாவில் சுமார் 300 வங்கிகள் கடந்த இரண்டு-மூன்று நாட்களாக வங்கி சேவைகள் சரி வர இயக்க முடியாமல் பிரச்சினைகளைச் சந்தித்து வருவதாகத் தெரிவித்தார்.
"ஆர்டிஜிஎஸ் மற்றும் யுபிஐ போன்ற அனைத்து ஆன்லைன் பரிவர்த்தனைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. பணம் அனுப்புபவரின் கணக்கிலிருந்து பிடித்தம் செய்யப்படுகிறது, ஆனால் பெறுநரின் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை" என்று அமரேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் சங்கானி கூறினார்.
வங்கிகள் ஜூலை 29 முதல் பாதிக்கப்பட்டு வருவதாகவும், சி-எட்ஜ் மென்பொருள் நிறுவன அதிகாரிகள் இதை தொழில்நுட்ப கோளாறு என்று கூறுவதாகவும் அவர் தெரிவித்தார். சி-எட்ஜ் நிறுவனம் இதுவரையில் எவ்விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
சி-எட்ஜ் நிறுவனம் என்பது நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் நாட்டின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் கூட்டணியில் உருவான நிறுவனமாகும்.
சி-எட்ஜ் நிறுவனத்தின் கட்டமைப்பில் கடந்த இரண்டு நாட்களாக ரான்சம்வேர் சைபர்செக்யூரிட்டி தாக்குதல் ஏற்பட்டு வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளது, சைபர் செக்யூரிட்டி தாக்குதல் ஏற்பட்ட பின்பு இந்த பிரச்சினையை சரிசெய்யவும், சமாளிக்கவும், இதைவிட முக்கியமாக பெரிய அளவிலான பண பரிமாற்ற அமைப்பை பாதுகாக்க சி-எட்ஜ் தனது கட்டமைப்பை பிற சேவைகளில் இருந்து தனிமைப்படுத்தி தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சி-எட்ஜ் நிறுவனத்தின் கட்டமைப்பில் ரான்சம்வேர் தாக்குதல் மூலம் எந்த நிதி இழப்பும் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது, ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இதுக்குறித்து மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் என்பிசிஐ அமைப்பு இன்று மாலையில் வெளியிட்ட அறிக்கையில் "சி-எட்ஜ் டெக்னாலஜிஸ் நிறுவனம் ரான்சம்வேர் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சில அமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன" என்று கூறியுள்ளது. மேலும், சி-எட்ஜ் நிறுவனத்தை என்பிசிஐ இயக்கும் ரீடைல் பேமெண்ட் சிஸ்டம் உடனான தொடர்பை தற்காலிகமாக நீக்க வேண்டியிருந்ததாகவும் தெரிவித்துள்ளது.
சி-எட்ஜ் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து NPCI, வங்கி சேவை கட்டமைப்பை ரான்சம்வேர் தாக்குதலில் இருந்து மீட்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவசியமான பாதுகாப்பு மறு ஆய்வு நடந்து வருவதாகவும் NPCI தெரிவித்துள்ளது.
இந்த மீட்பு பணிகள் அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால், சி-எட்ஜ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் வங்கி கட்டமைப்பு வியாழக்கிழமை காலை அல்லது மதியம் செயல்படத் தொடங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. சி-எட்ஜ் டெக்னாலஜிஸ்-ன் ரான்சம்வேர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட வங்கிகள் நாட்டின் மொத்த பேமெண்ட் அமைப்பில் 1 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளன என்று மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications