முன்னணி ரைடு ஹெய்லிங் நிறுவனமான ரேபிடோ தனது பயனர்கள் மற்றும் ஓட்டுநர்களின் முக்கியமான தனிப்பட்ட தகவல்களான பெயர், முகவரி மற்றும் மொபைல் நம்பர் போன்ற தகவல்களை வெளிப்படுத்தியதாக சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் நிறுவனம் அதை சரி செய்துள்ளதாக புதன்கிழமை அன்று தெரிவித்துள்ளது. இந்த டேட்டா மீறல்கள் நிறுவனத்தின் ஃபீட்பேக் போர்ட்டலால் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பொதுவாகவே நிறுவனங்கள் தங்களுடைய சாப்ட்வேர் சார்ந்த சேவைகளுக்காக பிற நிறுவனங்களை நம்பியிருக்கும். அப்படித்தான் ரேபிடோ நிறுவனத்தின் ஃபீட்பேக் கலெக்ஷன் சிஸ்டமிற்க்கும், மூன்றாம் தரப்பு சேவை வழங்குனருக்கும் இடையிலான API ஒருங்கிணைப்பின் போது இந்த பாதுகாப்பு மீறல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பயனர்களின் முழு பெயர், முகவரி மற்றும் நம்பர் ஆகியவற்றுக்கு அங்கீகரிக்கப்படாத அணுகல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

செக்யூரிட்டி பிரீச் என்றால் என்ன?: பொதுவாக ஒரு இணையதளம் அல்லது டேட்டாவை கொண்ட ஒரு தளம் அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் அல்லது நெட்வொர்க் போன்றவற்றில் அங்கீகரிக்கப்படாத அனுகல் ஏற்பட்டாலோ அல்லது டேட்டா திருட்டு ஏற்பட்டாலோ செக்யூரிட்டி பிரீச் ஏற்படுகிறது. இதை தமிழில் டேட்டா மீறல் என்று கூட சொல்லலாம். இதனால் டேட்டா தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. இப்படி ஏற்படுவதனால் தனி நபர்கள், நிறுவனங்கள் போன்றவற்றுக்கு கடுமையான நிதி இழப்புகள் ஏற்படும் அபாயம் உண்டு.
TechCrunch-இன் அறிக்கையின்படி, 1,800-க்கும் மேற்பட்ட ஃபீட்பேக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், அதில் மொபைல் நம்பர், மெயில், பெயர் போன்ற தனிப்பட்ட தகவல்கள் பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
"எங்கள் சேவைகள் குறித்து தெரிந்து கொள்ள பயனர்களிடமிருந்து ஃபீட்பேக் பெரும் செயல்முறையில் இறங்கினோம். இது மூன்றாம் தரப்பினரால் நிர்வகிக்கப்படுகிறது. பொதுமக்களின் தனிப்பட்ட விவரங்கள் சில தவறான பயணர்களை சென்றடைந்ததை கண்டறிந்தோம். அதை உடனடியாக சரி செய்துள்ளோம். எனவே வேகமாக வளர்ந்து வரும் நிறுவனமாக பயனர்களின் டேட்டாவை பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறோம்", என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இன்றைய சூழலில் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் தங்களின் டேட்டாவை பாதுகாப்புடன் கையாள்வது முக்கியம். அந்த வகையில் ராப்பிடோ நிறுவனம் விரைந்து செயல்பட்டு டேட்டா மீறலை சரி செய்துள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications