இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் நாம் சாப்பிட விரும்பும் உணவுகளை தேடிச் சென்று சாப்பிட வேண்டியதில்லை. இருந்த இடத்தில் இருந்தே ஃபோனில் ஆர்டர் செய்தால் போதும். அது உங்களை தேடி வந்து விடும். அந்த வகையில், தற்போது பிரபலமாக இருக்கும் உணவு டெலிவரி நிறுவனங்கள் என்றால், அது ஸ்விக்கி மற்றும் சொமாட்டோ தான். உணவை ஆர்டர் செய்யலாம் என்றாலே, அனைவருக்கும் முதலில் நினைவு வருவது இந்த இரண்டு செயலிகளும் தான். அந்த அளவிற்கு உணவு துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது ஸ்விக்கி மற்றும் சொமாட்டோ.
ஆனால், தற்போது அதை முறியடிக்க ரேபிடோ நிறுவனம் களமிறங்கியுள்ளது. டாக்ஸி துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது போல், உணவு டெலிவரி துறையிலும் புதிய புரட்சியை ஏற்படுத்த ரேபிடோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஸ்விக்கி மற்றும் சொமாட்டோவை அதிக கமிஷன் வசூலிக்கும் நிலையில், ரேபிடோ பூஜ்ஜிய கமிஷனில் உணவுகளை டெலிவரி செய்ய தயாராகி வருகிறது. இந்த முயற்சி சிறு உணவங்களுக்கு பயனளிக்கும் என்று கூறப்படுகிறது.

தற்போது சொமாட்டோ நிறுவனம் ஒவ்வொரு நாளும் 2.5 மில்லியனுக்கும் அதிகமான உணவு விநியோகங்களை நிறைவு செய்து வருகிறது. அதேபோல், ஸ்விக்கி ஒவ்வொரு நாளும் 2 மில்லியனுக்கும் அதிகமான உணவு விநியோகங்களை செய்கிறது. இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து உணவு விநியோகத் துறையில் 95% சந்தைப் பங்கைக் கொண்டுள்ளன. இது $8 பில்லியனுக்கும் அதிகமான அளவு கொண்டது.
அண்மை காலமாகவே ஸ்விக்கி மற்றும் சொமாட்டோ நிறுவனங்கள் அதிக கமிஷன் பெறுவதால், அதில் இருந்து சிறு உணவகங்கள் வெளியேறி வருகிறது. இதனால், இந்த இரண்டு நிறுவனங்களும் சரிவை சந்தித்துள்ளன. இந்த சூழலில் தான், ரேபிடோவின் முடிவு ஸ்விக்கி மற்றும் சொமாட்டோவுக்கு புதிய தலைவலியை கொடுத்துள்ளது. முதன்முதலில் உணவு டெலிவரி சேவையை ரேபிடோ நிறுவனம் பெங்களூருவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. அதில் கிடைக்கும் வெற்றியை பொறுத்து சென்னை, கோவை உள்ளிட்ட மற்ற நகரங்களில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
முதன்முதலில் ரேபிடோவின் பைக் டாக்ஸியும் கடந்த 2015ஆம் ஆண்டு பெங்களூருவில் தான் தொடங்கப்பட்டது. பின்னர் தான், சென்னை, ஹைதராபாத் போன்ற பெருநகரங்களுக்கு சென்றடைந்தது. அதே முறையைத்தான் தற்போது உணவு டெலிவரி சேவையிலும் பின் தொடர உள்ளது. ஸ்விக்கி மற்றும் சொமாட்டோ நிறுவனங்கள் ஃபுட் டெலிவரிக்கு 16 முதல் 30% வரை கமிஷன் வசூலிக்கிறார்கள். ஆனால், உணவு விநியோகத்தில் பூஜ்ஜிய கமிஷன்கள் மூலம் அதைச் செய்ய ரேபிடோ திட்டமிட்டுள்ளது.
மேலும் ரூ.100க்கு மேல் உள்ள அனைத்து உணவு ஆர்டர்களுக்கும் ரேபிடோ ரூ.25 டெலிவரி கட்டணமாக வசூலிக்கும். ரூ.100 மற்றும் அதற்குக் குறைவான அனைத்து உணவு ஆர்டர்களுக்கும் ரூ.20 நிலையான கட்டணம் வசூலிக்கும். இதன் மூலம் ரேபிடோ செயலியில் பைக், ஆட்டோ, டாக்ஸி புக் செய்வது போல் உணவையும் ஆர்டர் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆன்லைன் விலைகள் ஆஃப்லைன் விலைகளுக்கு இணையாக இருப்பதை உறுதி செய்தல், நேர்மையான விலை நிர்ணயம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக ரேபிடோ தெரிவித்துள்ளது. ரேபிடோவின் இந்த புதிய முயற்சி உணவு விநியோக சந்தையில் கடும் போட்டியை உருவாக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
More From GoodReturns

வருமானம் போனாலும் பரவாயில்ல!! டிசிஎஸ் எடுத்த அதிரடி முடிவால் ஆடிப்போன ஊழியர்கள்!!

கொத்து கொத்தாக அமெரிக்கா விட்டு வெளியேறும் இந்தியர்கள்.. நேரா பெங்களூரில் லேண்டிங்.. என்ன காரணம்..?

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

அமெரிக்காவில் புது டிரெண்ட்..! ஷூ, செருப்பு இல்லாமல் ஆபீஸ்.. தெய்வீகமாக இருக்கு பாஸ்..!

AI நீங்க நினைக்கிற மாதிரி 'ஈசி' கிடையாது.. ரொம்ப கஷ்டம்.. உண்மையை உடைத்த விப்ரோ COO சஞ்சீவ்..!!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications