ரத்தன் டாடா மறைவுக்கு பின்பு.. முதல் முறையாக சந்திரசேகரனை சந்தித்த நோயல் டாடா.. என்ன நடந்தது..?

டாடா டிரஸ்ட்ஸின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட நோயல் டாடா, கடந்த வாரம் டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரனுடன் தனது முதல் அதிகாரப்பூர்வ சந்திப்பை நடத்தினார். டாடா சாம்ராஜ்ஜியத்தின் இரு சக்திவாய்ந்த அமைப்புகளாக இருக்கும் டாடா சன்ஸ், டாடா டிரஸ்ட் அமைப்பின் தலைவர்கள் சந்தித்துள்ளது இக்குழுமத்தின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

ரத்தன் டாடா மறைவிற்கு பின்பு டாடா சன்ஸ், டாடா டிரஸ்ட் அமைப்புகளுக்கு மத்தியிலான இணக்கம் ஏதுவாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த சந்திப்பு நடந்துள்ளது. மேலும் டாடா சன்ஸ் நிர்வாக குழுவில் நோயல் டாடா இணைவது குறித்தும், டாடா டிர்ஸ்ட் சார்பில் 3வது உறுப்பினர் சேர்ப்பது குறித்தும் எவ்விதமான முடிவும் எடுக்கப்படவில்லை.

ரத்தன் டாடா மறைவுக்கு பின்பு.. முதல் முறையாக சந்திரசேகரனை சந்தித்த நோயல் டாடா.. என்ன நடந்தது..?

இதேபோல் நோயல் டாடா அடுத்த சில நாட்களில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பு டாடா குழுமத்திற்கும் அரசுக்கும் மத்தியிலான இணக்கத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் நடக்க உள்ளது.

டாடா சாம்ராஜ்ஜியத்தின் மொத்த ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸில் 66% பங்கை வைத்திருக்கும் டாடா டிரஸ்ட்ஸ், சமீபத்தில் ரத்தன் டாடாவுக்குப் பிறகு நோயல் டாடாவை தலைவராக நியமித்தது. ரத்தன் டாடாவின் சகோதரரான நோயல் டாடா, சர் டோரபஜி டாடா டிரஸ்ட் மற்றும் சர் ரத்தன் டாடா டிரஸ்ட் ஆகியவற்றின் டிரஸ்ட்டியாக பல ஆண்டுகளாக இருந்து வருகிறார்.

ஒரே நேரத்தில் டாடா சன்ஸ் மற்றும் டாடா டிரஸ்ட்ஸ்-க்கும் தலைவராக இணைந்து இருந்த கடைசி நபர் ரத்தன் டாடா தான், தனது பதவிக்காலத்திலேயே டாடா குழுமத்தின் எதிர்காலத்தை வடிவமைக்க ஒரு நிர்வாகக் குழுவை (EC) அமைத்திருந்தார்.

இந்த நிர்வாக குழு மூலம் தனிநபர் முடிவைச் சார்ந்து இருக்காமல், ஒரு கூட்டமைப்பாக முடிவுகளை எடுக்க கட்டமைக்கப்பட்டது. இதன் மூலம் டாடா டிரஸ்ட்களையும், டாடா குழுமத்தையும் சரிவர நிர்வகிக்க முடியும் என்பது ரத்தன் டாடா திட்டம்.

ரத்தன் டாடா மறைவிற்குப் பின்பு நோயல் டாடா பதவி உயர்வு, 3வது உறுப்பினர் சேர்ப்பு ஆகியவற்றின் நிர்வாகத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டுவிடாமல் இருக்க மென்மையான மாற்றம் மற்றும் தொடர்ச்சியான வளர்ச்சியை உறுதி செய்யவே இந்த நோயல் டாடா, என் சந்திரசேகரன் மத்தியிலான சந்திப்பு நடந்துள்ளது.

நோயல் டாடா, மெஹ்லி மிஸ்திரி, வெனு ஸ்ரீனிவாசன் மற்றும் விஜய் சிங் ஆகிய நான்கு உறுப்பினர்களை உள்ளடக்கிய நிர்வாகக் குழுவை ரத்தன் டாடா அப்போது நிறுவியிருந்தார். இந்த குழு கூட்டாக டிரஸ்ட்களை நிர்வகிக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+