டெல்லி: இந்திய மக்களை கொரோனா வைரஸ் என்னும் பெருந்தொற்று நோயிலிருந்து காப்பாற்ற, 1,500 கோடி ரூபாயினை வாரி வழங்கிய வள்ளல் தான் தொழிலதிபர் ரத்தன் டாடா.
Recommended Video
நாட்டு மக்களை கொரோனா வைரஸ் எனும் பெருந்தொற்று நோயிலிருந்து காப்பாற்றவே இதனை அளித்ததாகவும் டாடா குழுமம் அப்போது தெரிவித்தது.
ஆக இத்தனை மனித நேயம் மிக்க மனிதரான ரத்தன் டாடா சமூக வலைதளங்களில் மக்கள் யாரும் வெறுப்புணர்வை பகிர வேண்டாம். யார் மனதையும் புண்படுத்தும் வகையில் சொற்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
ரத்தன் டாடா எதிர்பார்ப்பு
இது குறித்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், இந்த ஆண்டு அனைவருக்கும் சவாலான வருடமே. ஆக நாம் ஒருவருக்கொருவர் உதவியாகவும், மிக ஒற்றுமையுடனும் இருக்க வேண்டும். ஆனால் இது மற்றவர்களை காயப்படுத்தும் நேரம் இதுவல்ல என்வும் குறிப்பிட்டுள்ளார்.
இது கட்டாயம் தேவை
மேலும் அனைவருக்கும் இடையே நல்ல புரிதலும், அதிக அன்பும், அதிக பொறுமையும் தற்போது தேவைப்படுகிறது. அரவனைப்பும் ஊக்கமும் உள்ள தளமாக சமூக வலைதளங்கள் மாறும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் சமூகம்
மற்றவர்களை தாழ்த்திப் பேசுதல், வெறுப்பை விதைக்கும் வகையில் பேசுதல், இதை ஆன்லைன் சமூகம் நிச்சயமாக கைவிட வேண்டும் என்று தொழிலதிபர் ரத்தன் டாடா கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் பல வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்க வேண்டிய நிலையே நீடித்து வருகிறது.
சவால்கள் நிறைந்துள்ளது
இதன் காரணமாக ஏரளமான மக்கள் தங்களது வேலையினை இழந்துள்ளனர். கொரோனா தொற்றினை தவிர சில வாரங்களுக்கு முன்பு கடும் வெள்ளத்தாலும், வெட்டுக்கிளி தாக்குதல்களையும் சமாளிக்க வேண்டியுள்ளது. இதற்கிடையில் கடந்த வாரம் சீனாவுடன் வன்முறை மோதலில் 20 ராணுவ வீரர்கள் பலியானர்கள். ஆக இதற்கு மத்தியில் தான் இந்த ஆண்டுக்கு அனைவருக்கும் சவால்கள் நிறைந்துள்ளது.
உத்வேகம் அளிக்கிறது
இதன் காரணமாக ஆன்லைன் சமூகத்தில் ஒருவருக்கொருவர் புண்படுத்துவதையும், ஒருவரையொருவர் வீழ்த்துவதையும் நான் காண்கிறேன் என்றும் ரத்தன் டாடா தனது இன்டாகிராம் பக்கத்தில் எழுதியுள்ளார்.
மேலும் அவரின் இந்த பதிவுக்கு லைக்குகளும் கமாண்டுகளும் அதிகரித்து வருகின்றனர். பலர் அவருக்கு நன்றி கூறியுள்ளதோடு, பலர் உங்களின் பதிவு உத்வேகம் அளிப்பதாகவும் எழுதியுள்ளனர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications