பொங்கல் பண்டிகை நெருங்குவதை ஒட்டி தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்க பணம் வழங்குமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அரசு சார்பாக பொங்கல் பரிசு தொகுப்பு என்பது வழங்கப்படுகிறது.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதலே ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது. 2022ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பச்சரிசி உள்ளிட்ட 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பை வழங்கியது. 2023 ஆம் ஆண்டில் ஒரு கிலோ பச்சரிசி , ஒரு கிலோ சர்க்கரை மற்றும் 2 கரும்பு உட்பட 1000 ரூபாய் ரொக்க பணமாக வழங்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு பொங்கலுக்கு அரிசி ,சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு 1000 ரூபாய் ரொக்கம் ஆகியவை மட்டுமே வழங்கப்பட்டன.

2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரொக்க பணம் வழங்கப்படவில்லை. அரிசி , சர்க்கரை , கரும்பு ஆகியவை மட்டுமே வழங்கப்பட்டன. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த பொங்கல் பண்டிகையின் போது அரசு பொங்கல் பரிசு தொகை வழங்கும் என்று எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்து இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பில் 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்.

இந்த முறை பொங்கல் பரிசு தொகுப்புடன் 3000 ரூபாய் பணத்தை வழங்குவதற்கு அரசு திட்டமிட்டு இருப்பதாக தொடர்ச்சியாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. பொங்கல் பரிசு தொகை தொடர்பாக தலைமை செயலகத்திலும் தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய சூழலில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொங்கல் பரிசு தொகை குறித்து பேசி இருக்கிறார்.
திருச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பொங்கல் பரிசு தொகையாக 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி இருக்கிறார், இது குறித்த முதலமைச்சர் நிச்சயமாக ஒரு நல்ல முடிவு எடுப்பார் என தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையே பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பொங்கல் பரிசு தொகை தொடர்பான அறிவிப்பை விரைவில் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிடுவார் என சொல்லப்படுகிறது. ஜனவரி முதல் வாரத்தில் பொங்கல் பரிசுக்கான டோக்கன் விநியோகமும், ஜனவரி இரண்டாவது வாரத்தில் பொங்கல் பரிசு விநியோகமும் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications