ரேமண்ட் குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கவுதம் சிங்கானியா தனது மனைவி நவாஸ் மோடி சிங்கானியா உடன் பிரிந்துவிட்டதாகத் திங்கள்கிழமை தனது டிவிட்டர் பக்கத்தில் மிகவும் வருத்தத்துடன் அறிவித்தார். திருமணமாகி 32 ஆண்டுகள் ஆன இந்தத் தம்பதிக்கு நிஹாரிகா மற்றும் நிசா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
"கடந்த தீபாவளி போல் இந்தத் தீபாவளி இருக்காது" என்று கௌதம் சிங்கானியா X எனப்படும் டிவிட்டரில் பதிவிட்டு இந்தியத் தொழிற்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். சில நாட்கள் முன்பு தான் ரேமண்ட் குழுமத்தின் தலைவரும் கவுதம் சிங்கானியா மிகப்பெரிய வர்த்தக விரிவாக்கத் திட்டத்தைக் கையில் எடுத்தார்.

Raymond குரூப் லைப்ஸ்டைல் துறையில் அசத்தி வந்தாலும் அதன் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் பொருட்டு புதிய முயற்சியை எடுத்துள்ளது. ரேமண்ட் குழுமம் பெரும் ரிஸ்க் எடுத்து Maini Precision Products Limited என்றும் நிறுவனத்தில் சுமார் 682 கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்து 59.25 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது.
இந்த முதலீட்டின் மூலம் ரேமண்ட் குழுமம் ஏரோஸ்பேஸ், பாதுகாப்புத் துறை மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான உதிரிப்பாகங்கள் வணிகத்தில் நுழைவதாக அறிவித்துள்ளது. ரேமண்ட் நிறுவனம் லைப்ஸ்டைல் தாண்டி ரியல் எஸ்டேட் மற்றும் இன்ஜினியரிங் துறையில் சிறிய அளவில் இயங்கி வந்தாலும் இது புதிய முயற்சியாகப் பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் கவுதம் சிங்கானியா தனது மனைவி நவாஸ் மோடி சிங்கானி திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாகலும், இருவரும் தனித்தனி பாதையில் செல்ல உள்ளதாகவும் தெரிவித்தார் கவுதம் சிங்கானியா. மேலும் விவாகரத்துக்கு விண்ணப்பிப்பது குறித்து வெளிப்படையாகத் தெரிவிக்காத நிலையில் 32 வருட திருமண வாழ்க்கையில் தானும் நவாஸ் மோடி சிங்கானியாவும் எப்பொழுதும் ஒருவருக்கொருவர் பலமாக இருந்து வருகிறோம் என்று கூறினார்.
நானும் நவாஸும் இப்போதிருந்து வெவ்வேறு பாதைகளைத் தொடர்ந்தாலும், எங்கள் இரண்டு விலைமதிப்பற்ற வைரங்களான நிஹாரிகா மற்றும் நிசா ஆகியோரின் வாழ்க்கைக்குச் சிறந்ததை நாங்கள் தொடர்ந்து செய்வோம் என்று ரேமண்ட் தலைவர் கவுதம் சிங்கானியா தெரிவித்தார். இவருடைய மனைவி நவாஸ் மோடி சிங்கானியா ஒரு பிட்னஸ் கோச் ஆக உள்ளார்.

கவுதம் சிங்கானியா மற்றும் நவாஸ் மோடி சிங்கானியா பிரிவுக்குக் காரணமாகக் கவுதம் அவர்களைச் சுற்றி இருந்தவர்களும், சார்ந்தவர்களும், விரும்பாதவர்களும் பரப்பிய வதந்தி, கிசுகிசு-க்கள் ஆகியவற்றின் எதிரொலியாகத் தாங்கள் பிரிவதாகவும் கூறியுள்ளார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications