மும்பை: இந்தியாவில் தற்போது ஐபிஓ சந்தை மிகவும் உயிர்ப்புடன் இருந்தாலும் SME நிறுவனங்களின் ஐபிஓ மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்த நிலையில் ஐபிஓ சந்தையின் மேஜிக்-ஐ பயன்படுத்திக்கொள்ளப் பல முன்னணி நிறுவனங்கள் முயற்சி செய்து வரும் வேளையில் கிட்டத்தட்ட 100 ஆண்டு பழமையான தொழில் சாம்ராஜ்ஜியமான ரேமண்ட், 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் தனது ஆடை மற்றும் ரியல் எஸ்டேட் பிரிவுகளைப் பங்குச்சந்தையில் பட்டியலிடத் திட்டமிட்டுள்ளது, இதன் மூலம் நிறுவனர்கள் பங்குதாரர்களின் மதிப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
ரேமண்ட் குழுமத்தின் தலைவரான கௌதம் சிங்கானியா குடும்ப பிரச்சனையில் மாட்டிக்கொண்டு நிர்வாகத்தில் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டு வரும் வேளையில் இந்த ஐபிஓ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கௌதம் சிங்கானியா மற்றும் அவருடைய மனைவி நவாஸ் மோடி மத்தியிலான விவாகரத்து பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் வேளையில், ரேமண்ட் குழுமத்தின் அதிகாரத்தை கௌதம் தக்கவைத்துள்ளார்.

ரேமண்ட் குழுமம் தற்போது இன்ஜினியரிங், விண்வெளி முதல் ஃபேஷன் மற்றும் ரியல் எஸ்டேட் வரையிலான பல துறைகளில் வணிகம் செய்து வருகிறது. கடந்த சில வருடத்தில் பல துறையில் நிறுவனங்களையும், வர்த்தகத்தையும் கைப்பற்றப்பட்டது, லைப்ஸ்டைல் மற்றும் டெக்ஸ்டைல் துறையில் மட்டுமே தனது வர்த்தக கட்டமைப்பை மீட்டு கொண்டு வருவதற்கு உதவியது.
ரேமண்ட் லைஃப்ஸ்டைல் லிமிடெட் இந்த வாரம் வியாழக்கிழமை மும்பையில் வர்த்தகம் தொடங்கியதும், ரியல் எஸ்டேட் பிரிவு 2025 இல் பட்டியல்படுத்த தயாராகும், இதன் மூலம் அடுத்த ஆண்டு ரேமண்ட் குழுமத்தின் மூன்று நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டு இருக்கும் என ரேமண்ட் குழும தலைவர் கௌதம் ஹரி சிங்கானியா தெரிவித்தார்.
இந்த மறுசீரமைப்பின் முக்கியமான நோக்கம், ரேமண்ட் குழுமம் தற்போது கன்சோலிடேட்டட் கட்டமைப்பாக உள்ளது. இதை மொத்தமாகத் தகர்த்து தனித்தனியாகப் பட்டியலிடப்படும் போது இதன் வணிகங்களுக்குச் சரியான மதிப்பீடு கிடைப்பது மட்டும் அல்லாமல் முதலீட்டாளர்களுக்கும் அதிகப்படியான முதலீட்டு லாபத்தை அளிக்க முடியும் என்று அவர் கூறினார்.
ரேமண்ட் குழுமத்தின் தாய் நிறுவனம் இன்ஜினியரிங் மற்றும் ஆட்டோ உதிரிப்பாகங்கள் பிரிவைத் தக்கவைத்துக் கொள்ளும். இந்த வாரம் நடக்கும் ரேமண்ட் லைஃப்ஸ்டைல் பட்டியலிடுவதன் மூலம் ரேமண்ட் லிமிடெட்டில் பங்குகளை வைத்திருக்கும் ஒவ்வொரும் 5 பங்குகளுக்கு, 4 ரேமண்ட் லைஃப்ஸ்டைல் பங்குகளைப் பெறுவார்கள்.
ரேமண்ட் லைஃப்ஸ்டைல் பட்டியலிடுவதன் வாயிலாக இன்று ரேமண்ட் பங்குகள் யாரும் எதிர்பார்க்காத வகையில் 9 சதவீதம் வரையில் அதிகரித்து, வர்த்தகம் முடியும் போது 5 சதவீத உயர்வுடன் முடிந்தது. இந்த ஆண்டு 89% உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications