கொரோனா தொற்று காரணமாக பொருளாதார சூழல் என்பது கடுமையாக மாறியுள்ளதாக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆளுநர், இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து கொரோனா நிலையை கண்கானிக்கும்.
கொரோனா தொடர்பான சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளை மார்ச் 2022 வரை மேம்படுத்துவதற்காக, ரிசர்வ் வங்கி 50,000 கோடி ரூபாய் பணப்புழக்கத்தினை அறிவிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
என்னென்ன சேவைகள்
இதனை வங்கிகள் தடுப்பூசி உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், தடுப்பூசி சப்ளையர்கள், மருத்துவ உபகரணங்கள், ஹாஸ்பிட்டல்ஸ், மருந்தகங்கள், மருத்துவ ஆய்வகங்கள், ஆக்சிஜன் உற்பத்தியாளர் மற்றும் சப்ளையர்கள், தடுப்பூசி இறக்குமதியாளார்கள், கொரோனா தொடர்பான மருந்து இறக்குமதிகள், லாகிஸ்டிக்ஸ் நிறுவனங்கள் மற்றும் மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட அம்சங்களுக்காக இந்த பணப்புழக்கத்தினை அறிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும்
மேலும் கொரோனாவால் மக்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதற்கிடையில் பொருளாதாரத்திற்கு மீண்டும் சரிவினைக் காணத் தொடங்கியுள்ளது. உலகப் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பொதுமக்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் பாதிக்காமல் இருக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறியுள்ளார்.
மைக்ரோ பைனான்ஸ்களுக்கு சலுகை
புதிய சவால்களைக் கருத்தில் கொண்டு, ஸ்மால் பைனான்ஸ் வங்கிகள்
இப்போது 500 கோடி ரூபாய் வரை சொத்து அளவு கொண்ட மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களுக்கு புதிய கடனளிப்பதைக் கருத்தில் கொள்ள அனுமதிக்கப்படுகின்றன. அரசின் இந்த முன்னுரிமைத் துறை கடன், மார்ச் 31, 2022 வரை கிடைக்கும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ஸ்மால் பைனான்ஸ் வங்கிகளுக்கும் சலுகை
சிறு, குறு மற்றும் பிற அமைப்புசாரா நிறுவனங்களுக்கு கூடுதல் ஆதரவை வழங்குவதற்காக, ஸ்மால் பைனான்ஸ் வங்கிகளுக்கான சிறப்பு நீண்ட கால ரெப்போ நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது 3 ஆண்டு ரெப்போ செயல்பாடுகள் மூலம் 10,000 கோடி ரூபாய் வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதியதாக கடன் வாங்கும் ஒவ்வொருவருக்கும் 10 லட்சம் ரூபாய் வரை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையானது 31 அக்டோபர் 21 வரை அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் அவகாசம் கொடுக்கலாம்
ஏற்கனவே மறுசீரமைப்பு மூலம் இரண்டு ஆண்டுகள் கால அவகாசத்தினை பெற்றவர்களுக்கு, மேலும் 2 ஆண்டுகள் அவகாசம் கொடுக்கலாம் கூறியுள்ளது.
G- SAP 1.0 இன் கீழ் மொத்தம் ரூ.35,000 கோடிக்கு அரசு பத்திரங்களை இரண்டாவது முறையாக மே 20ம் தேதி வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
More From GoodReturns

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்



Click it and Unblock the Notifications