ரெப்போ விகிதத்தை விட்டு தள்ளுங்க.. முத்து முத்தா 6 அறிவிப்பை RBI வெளியிட்டுள்ளது..!!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் இன்று (ஏப்ரல் 9, 2025) 6 முக்கிய நடவடிக்கைகளை எடுப்பதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புகள் வங்கி மற்றும் நிதித் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, வாராக் கடன்களைக் கையாளுதல், இணை கடன் வழங்குதல், தங்க நகைக் கடன்கள் மற்றும் கடன் மேம்பாடு தொடர்பான புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட உள்ளன.

1. ரிசர்வ் வங்கி ஆளுநர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகளில் ஒன்று, சிக்கலான சொத்துக்களை பத்திரமயமாக்குவதை (securitisation of stressed assets) செயல்படுத்துவதற்கான முன்மொழிவு ஆகும். ரிசர்வ் வங்கி வாராக் கடன்களை (Stressed Assets) பத்திரங்களாக மாற்றுவதற்கான வழிமுறைகளை உருவாக்க முன்மொழிந்துள்ளது.

ரெப்போ விகிதத்தை விட்டு தள்ளுங்க.. முத்து முத்தா 6 அறிவிப்பை RBI வெளியிட்டுள்ளது..!!

இதன் மூலம், வங்கிகள் தங்கள் வாராக் கடன்களை திறம்பட நிர்வகிக்கவும், அவற்றிலிருந்து மதிப்பை மீட்டெடுக்கவும் முடியும். இந்த நடவடிக்கை, வங்கிகளின் நிதி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2. இணை கடன் வழங்குதல் (co-lending) என்பது தற்போது முக்கியமான துறைக்கு (priority sector) கடன் வழங்கும் போது வங்கிகள் மற்றும் NBFC-க்கள் இணைந்து கடன் வழங்கும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களில் அனைத்து ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களுக்கும், அனைத்து வகையான கடன்களுக்கும் நீட்டிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதன் மூலம், அதிக எண்ணிக்கையிலான துறைகள் பலன் பெற உள்ளது.

3. தங்கத்தை பிணையமாக வைத்து வழங்கப்படும் கடன்களுக்கான (loans against collateral against gold) விரிவான விதிமுறைகளை வெளியிடுவது ஆகும். தங்க நகைக் கடன்கள் இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் நிலையில், இந்த புதிய விதிமுறைகள் கடன் வழங்குவதில் வெளிப்படைத்தன்மையையும், கடன் வாங்குபவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் நாடு முழுவதும் ஒரே நடைமுறையில் பின்பற்றக்கூடிய செயல்முறையை ஆர்பிஐ அறிவிக்க உள்ளது.

4. ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களால் வழங்கப்படும் பகுதி கடன் மேம்பாடு (partial credit enhancement) தொடர்பான விரிவான வழிகாட்டுதல்களை வெளியிடுவது ஆகும். இந்த நடவடிக்கை, கடன் பத்திரங்களின் தரத்தை உயர்த்தி, அதிக முதலீட்டாளர்களை ஈர்க்க உதவும். இதன் மூலம், நிறுவனங்கள் எளிதாக நிதி திரட்ட முடியும்.

ரிசர்வ் வங்கி இந்த நான்கு வழிகாட்டுதல்களின் வரைவுகளை இன்று வெளியிட்டு, இத்துறைக்குச் சம்பந்தப்பட்ட நிர்வாகம், ஒழுங்குமுறை அமைப்புகளின் கருத்துக்களைக் கேட்கவுள்ளது. இந்த கருத்துக்கள் பரிசீலிக்கப்பட்ட பிறகு, இறுதி வழிகாட்டுதல்களை மாற்றங்கள் உடன் வெளியிடப்படும்.

5. இந்தியத் தேசிய பேமெண்ட் கழகத்திற்கு (NPCI), வங்கிகள் மற்றும் பிற நிதி அமைப்புகளுடன் கலந்தாலோசித்து, தனிநபர் நிதி பரிவர்த்தனைகளுக்கான UPI பரிவர்த்தனை வரம்பை தற்போது இருக்கும் 1 லட்சம் அளவீட்டை ரூ. 2,00,000 ஆக உயர்த்தும் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. தற்போதுள்ள வரம்பு குறைவாக இருப்பதாகப் பல தரப்பினரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், இதை உயர்த்த ஆர்பிஐ முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது.

6. ஆர்பிஐ தற்போது செயல்முறையில் இருக்கும் ரெகுலேட்டரி சாண்ட்பாக்ஸ் (regulatory soundbox) முறையை எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பிக்கும் ஓப்பன் என்டெட் வகையில் (on-tap) முறைக்கு மாற்ற முடிவு செய்துள்ளது.

இந்த முறை, புதுமையான நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் (FinTechs) தங்கள் புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை ஒரு கட்டுப்படுத்தப்பட்ட, பாதுகாப்பான் சூழலில் சோதனை செய்ய உதவும். இதன் மூலம், சந்தையில் அறிமுகப்படுத்துவதற்கு முன்பு அவற்றின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்படும்.

ரிசர்வ் வங்கியின் இந்த ஆறு புதிய நடவடிக்கைகளும், இந்திய நிதித்துறையின் வளர்ச்சிக்கும், ஸ்திரத்தன்மைக்கும் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, வாராக் கடன் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகள் வரவேற்கத்தக்கவையாக உள்ளது. இந்த அறிவிப்புகள் குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் வரைவு வழிகாட்டுதல்கள் ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+