இந்திய ரிசர்வ் வங்கியில் வெள்ளிக்கிழமை சக்திகாந்த தாஸ் தலைமையில் நடந்த 589வது சென்டரல் போர்ட் ஆப் டைரெக்டர்ஸ் கூடடத்தில் உபரியாக இருக்கும் 99,122 கோடி ரூபாய் தொகையை மத்திய அரசுக்கு அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த உபரி தொகையானது ஜூன் 2020 முதல் மார்ச் 2021ஆம் ஆண்டுக் காலத்தில் சேமிக்கப்பட்ட நிதி என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் ரிசர்வ் வங்கி risk buffer அளவீட்டை 5.50 சதவீதம் தொடர்ந்து நிலை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

இதேபோல் ரிசர்வ் வங்கி தனது கணக்கீட்டு ஆண்டுக் காலத்தை ஜூலை முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தை தற்போது ஏப்ரல் முதல் மார்ச் ஆக மாற்றியுள்ளது. இதன் வாயிலாகவே தற்போது 9 மாதங்களுக்கான தொகையைக் கணக்கீட்டு உபரி தொகையை மத்திய அரசுக்கு அளித்துள்ளது.
மேலும் இந்தக் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி நாட்டின் பொருளாதாரம், சர்வதேச பாதிப்புகள், உள்நாட்டுப் பாதிப்புகள், புதிய கொள்கை மாற்றங்கள், கொரோனா 2வது அலையில் ஏற்பட்டு உள்ள பாதிப்புகளை எப்படிக் குறைப்பது ஆகியவற்றையும் ஆலோசனை செய்துள்ளது.
மத்திய அரசு தனது 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையின் படி ரிசர்வ் வங்கியிடம் இருந்து 50000 கோடி ரூபாய் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த நிதியாண்டில் முழுக் கணக்கீட்டு ஆண்டில் ரிசர்வ் வங்கியிடம் இருந்து 57,128 கோடி ரூபாய் மட்டுமே பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது நினைத்தது விடவும் அதிகமாக அதாவது ரூ.99,122 கோடி அளித்துள்ளது, 2018-19ஆம் நிதியாண்டு கணக்கீட்டில் ரிசர்வ் வங்கி தனது கூடுதலாக வைத்திருந்த அளவீட்டையும் சேர்த்துக் கொடுத்த காரணத்தால் சுமார் 1.76 லட்சம் கோடி ரூபாய்க் கொடுத்தது. இதன் பின்பு இப்போது தான் அதிகப்படியான தொகையை இப்போதுதான் கொடுத்துள்ளது
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications