RBL வங்கியின் புதிய சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குநராக சுப்பிரமணிய குமார் என்பவரை நியமனம் செய்ய இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆர் சுப்பிரமணிய குமார் என்பவர் RBL வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக மூன்று ஆண்டுகளுக்கு நியமிக்க அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் 1949 இன் பிரிவு 35B பிரிவின் படி ஆர் சுப்பிரமணிய குமார் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார் என RBL வங்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
RBL வங்கி
ஆர். சுப்பிரமணிய குமார் அவர்களை நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஓவாக நியமனம் செய்ய ஒப்புதல் அளிப்பதற்கு தேவையான நடைமுறைகள் முடிந்துவிட்டதாகவும், வங்கியின் நிர்வாக இயக்குநர் கூட்டம் விரைவில் கூட்டப்படும் என்று RBL வங்கி தெரிவித்துள்ளது.
40 ஆண்டுகள் அனுபவம்
40 ஆண்டுகளுக்கு மேலாக வங்கித் துறையில் அனுபவமுள்ள சுப்பிரமணிய குமார் அவர்கள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி வகித்து உள்ளார். மேலும் சிக்கலில் இருந்த திவான் ஹவுஸிங் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிர்வாகியாகவும் இருந்து ரிசர்வ் வங்கியால் பாராட்டுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தகுதியான நபர்
இந்த நிலையில் RBL வங்கியின் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குனராக பதவி ஏற்றிருக்கும் சுப்பிரமணிய குமார் அவர்களை ஆர்பிஎல் வங்கி நிர்வாகம் அன்புடன் வரவேற்றுள்ளது. RBL வங்கியின் வளர்ச்சிக்கு சரியான நேரத்தில் தகுதி வாய்ந்த நபரை நாங்கள் பெற்றுள்ளோம் என்று RBL வங்கியின் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வரவேற்பு
RBL வங்கியின் தலைவர் பிரகாஷ் சந்திரா அவர்கள் சுப்பிரமணிய குமார் நியமனம் குறித்து கூறிய போது 'RBL வங்கிக்கு சுப்பிரமணிய குமார் அவர்களை அன்புடன் வரவேற்கிறேன் என்றும் வங்கித்துறையில் மூத்த அனுபவம் உள்ள அவரது அனுபவம் மற்றும் ஆதரவு எங்கள் நிறுவனத்தை மேலும் வலுப்படுத்தும் என்று நம்புகிறோம்' என்றும் கூறியுள்ளார். மேலும் RBL வங்கியின் அதிகமான ஆற்றலை புதுப்பிக்க அவருடைய தலைமை எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பை வழங்கும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
புதிய உயரம்
இந்த நிலையில் ஆர்பிஎல் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஓ பதவியை ஏற்ற சுப்பிரமணிய குமார், 'RBL வங்கியின் நிர்வாக குழுவுடன் இணைந்திருப்பதால் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் வங்கியின் வளம் மற்றும் வரவிருக்கும் மகத்தான வாய்ப்பை கருத்தில் கொண்டு புதிய உயரங்களை எட்ட என்னால் முடிந்ததை செய்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
7 லட்சம் வாடிக்கையாளர்கள்
இந்தியாவில் செயல்பட்டு வரும் தனியார் வங்கிகளில் ஒன்றான RBL வங்கி மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது என்பதும், இந்த வங்கியின் அனைத்து கிளைகளிலும் 7 லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications