ஃபெடரல் வங்கியின் (Federal Bank) நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக கிருஷ்ணன் வெங்கட் சுப்ரமணியனை நியமிப்பதற்கு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஒப்புதல் அளித்துள்ளது என்று வங்கி திங்களன்று தெரிவித்துள்ளது. தற்போது சிஇஓவாக பணியாற்றும் ஷியாம் சீனிவாசனின் பதவிக்காலம் முடியவிருப்பதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுப்பிரமணியன் வெங்கட்ராமனின் 3 ஆண்டு கால பதவிக்காலம், தற்போதைய நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ஷியாம் சீனிவாசனின் பதவிக்காலம் முடிந்த பிறகு தொடரும் என கூறப்படுகிறது.

தற்போதைய சிஇஓ ஷியாம் சீனிவாசனின் பதவிக்காலம் செப்டம்பர் 22, 2024 அன்று முடிவடைகிறது, எனவே செப்டம்பர் 23, 2024 முதல் சுப்ரமணிய கிருஷ்ணன் வெங்கட் பதவிக்காலம் தொடரும்.
இதற்கு முன்னர் சுப்ரமணியன், கார்ப்பரேட் பேங்கிங், கமர்ஷியல் பேங்கிங், பிரைவேட் பேங்கிங், அசெட் ரீகன்ஸ்ட்ரக்ஷன் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான பிரிவுகளுக்கு தலைமை தாங்கி, அதன் பின் ஏப்ரல் 30, 2024 வரை கோடக் மஹிந்திரா வங்கி லிமிடெட்டின் கூட்டு நிர்வாக இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
சுப்ரமணியன் கல்வி: வாரணாசியில் உள்ள IIT-இல் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பட்டமும், மும்பை ஜம்னாலால் பஜாஜ் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸில் நிதி நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். இவர் அக்கவுண்டன்ட் வேலையையும் செய்ததாகக் கூறப்படுகிறது.
கோடக் மஹிந்திரா ஃபைனான்ஸ் லிமிடெட் மூலம் NBFC துறையில் சுப்ரமணியனின் தொழில் தொடங்கியது. இவருக்கு இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங்-இல் அனுபவம் உள்ளது.
அவரது முந்தைய பணியில், தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், வங்கி சேவைகளை வலுப்படுத்துவதிலும் சுப்ரமணியன் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
மே 06, 2024 அன்று, வங்கியின் புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரிக்கான ஒப்புதலுக்காக, இந்திய ரிசர்வ் வங்கிக்கு ஃபெடரல் வங்கி செய்த விண்ணப்பத்தின் அடிப்படையில், ரிசர்வ் வங்கி, சுப்பிரமணியனை சிஇஓவாக நியமித்துள்ளது.
RBI ஜூலை 22, அன்று எழுதிய கடிதத்தில், கிருஷ்ணன் வெங்கட் சுப்ரமணியனை 3 ஆண்டுகளுக்கு வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
செப்டம்பர் 23, 2024 அன்று சியாம் சீனிவாசனின் பதவிக்காலம் முடிவடைந்த பிறகு சுப்ரமணியனின் பதவிக் காலம் தொடரும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications