ஃபெடரல் வங்கியின் புதிய சிஇஓ இவர்தான்.. அட இவரோட ஹிஸ்டரி பெருசா இருக்கே!

ஃபெடரல் வங்கியின் (Federal Bank) நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக கிருஷ்ணன் வெங்கட் சுப்ரமணியனை நியமிப்பதற்கு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஒப்புதல் அளித்துள்ளது என்று வங்கி திங்களன்று தெரிவித்துள்ளது. தற்போது சிஇஓவாக பணியாற்றும் ஷியாம் சீனிவாசனின் பதவிக்காலம் முடியவிருப்பதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுப்பிரமணியன் வெங்கட்ராமனின் 3 ஆண்டு கால பதவிக்காலம், தற்போதைய நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ஷியாம் சீனிவாசனின் பதவிக்காலம் முடிந்த பிறகு தொடரும் என கூறப்படுகிறது.

 ஃபெடரல் வங்கியின் புதிய சிஇஓ இவர்தான்.. அட இவரோட ஹிஸ்டரி பெருசா இருக்கே!

தற்போதைய சிஇஓ ஷியாம் சீனிவாசனின் பதவிக்காலம் செப்டம்பர் 22, 2024 அன்று முடிவடைகிறது, எனவே செப்டம்பர் 23, 2024 முதல் சுப்ரமணிய கிருஷ்ணன் வெங்கட் பதவிக்காலம் தொடரும்.

இதற்கு முன்னர் சுப்ரமணியன், கார்ப்பரேட் பேங்கிங், கமர்ஷியல் பேங்கிங், பிரைவேட் பேங்கிங், அசெட் ரீகன்ஸ்ட்ரக்ஷன் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான பிரிவுகளுக்கு தலைமை தாங்கி, அதன் பின் ஏப்ரல் 30, 2024 வரை கோடக் மஹிந்திரா வங்கி லிமிடெட்டின் கூட்டு நிர்வாக இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

சுப்ரமணியன் கல்வி: வாரணாசியில் உள்ள IIT-இல் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பட்டமும், மும்பை ஜம்னாலால் பஜாஜ் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸில் நிதி நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். இவர் அக்கவுண்டன்ட் வேலையையும் செய்ததாகக் கூறப்படுகிறது.

கோடக் மஹிந்திரா ஃபைனான்ஸ் லிமிடெட் மூலம் NBFC துறையில் சுப்ரமணியனின் தொழில் தொடங்கியது. இவருக்கு இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங்-இல் அனுபவம் உள்ளது.

அவரது முந்தைய பணியில், தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், வங்கி சேவைகளை வலுப்படுத்துவதிலும் சுப்ரமணியன் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

மே 06, 2024 அன்று, வங்கியின் புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரிக்கான ஒப்புதலுக்காக, இந்திய ரிசர்வ் வங்கிக்கு ஃபெடரல் வங்கி செய்த விண்ணப்பத்தின் அடிப்படையில், ரிசர்வ் வங்கி, சுப்பிரமணியனை சிஇஓவாக நியமித்துள்ளது.

RBI ஜூலை 22, அன்று எழுதிய கடிதத்தில், கிருஷ்ணன் வெங்கட் சுப்ரமணியனை 3 ஆண்டுகளுக்கு வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

செப்டம்பர் 23, 2024 அன்று சியாம் சீனிவாசனின் பதவிக்காலம் முடிவடைந்த பிறகு சுப்ரமணியனின் பதவிக் காலம் தொடரும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+