அனைத்து வங்கிகளும் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை செய்து தர வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
தற்போது ஒரு சில வங்கிகள் மட்டுமே ஏடிஎம் கார்டு இல்லாமல் ஏடிஎம் மிஷினில் இருந்து பணம் எடுக்கும் வசதியை செய்துள்ள நிலையில், இனி அனைத்து வங்கிகளும் இதனை கடைப்பிடிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
ஸ்கிம்மிங், குளோனிங் உள்பட பல்வேறு முறைகேடுகள் நடந்து வரும் நிலையில் இதனைத் தவிர்ப்பதற்காகவே கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் முறையை அனைத்து வங்கிகளும் செயல்படுத்த வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.
ஏடிஎம் கார்டு இன்றி பணம்
கார்டு இல்லாமல் UPI ஐடி மூலம் பணம் எடுக்கும் வசதி கொரோனா வைரஸ் பாதிப்பின் போது அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் கார்டு இல்லாமல் மொபைல் போன் மூலமே பணம் எடுக்கும் வசதியை பொதுமக்கள் பெற்றனர். ஏடிஎம் மெஷினில் கார்டை பயன்படுத்தி பணம் எடுக்கும்போது ஸ்கிம்மிங் போன்ற மோசடிகளால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டதாக புகார் வந்ததையடுத்து கார்டு இல்லாமல் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டதாக இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறினார்.
UPI பரிவர்த்தனை
மேலும் கார்டு இல்லாமல் பணபரிவர்த்தனையை UPI மூலம் பயன்படுத்துவதால் கூடுதல் பாதுகாப்பு கிடைக்கிறது என்றும், எந்தவித முறைகேடும் இதில் செய்ய வாய்ப்பில்லை என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
வங்கி செயலி
இந்த புதிய வசதியால் வாடிக்கையாளர்கள் தங்கள் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. மொபைல்போனில் வங்கியின் செயலியை ஓபன் செய்து அதன் மூலம் மிக எளிதாக UPI ஐடியை பின்கோடு, ஓடிபி எண்களை பதிவு செய்தால் தேவையான பணத்தை வங்கி ஏடிஎம்மில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்.
கூடுதல் கட்டணம்
இந்த வசதி தற்போது ஐசிஐசிஐ உள்பட ஒரு சில வங்கிகளில் இருந்தாலும் இன்னும் பல வங்கிகள் இந்த வசதியை தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு செய்து தரவில்லை. மேலும் இந்த வசதியை தந்து கொண்டிருக்கும் சில வங்கிகள் பரிவர்த்தனைக்கு வரம்பு வைத்துள்ளது என்பதும், அதுமட்டுமின்றி கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் கட்டணத்தை வங்கி விதித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
ரிசர்வ் வங்கி
ஆனால் தற்போது இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின்படி கூடுதல் கட்டணம் ஏதும் இல்லாமல் அனைத்து வங்கிகளும் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் ICCW வசதியை தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு செய்து தர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications