இந்தியாவில் செயல்படக்கூடிய அனைத்து வங்கிகளுமே மத்திய ரிசர்வ் வங்கியான ஆர்பிஐயின் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றன. பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் என அனைத்துமே ஆர்பிஐ வெளியிடக்கூடிய விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடந்தாக வேண்டும்.
ரிசர்வ் வங்கியை பொறுத்தவரை தொடர்ச்சியாக வங்கிகளின் செயல்பாடுகளை கண்காணித்து அவ்வப்போது விதிமுறைகளை மாற்றி அமைத்த வண்ணம் இருக்கிறது . அந்த வகையில் இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் பல்வேறு கட்டணங்கள் வசூல் செய்யப்படுவது தொடர்பாக சில கேள்விகளை முன் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

வங்கிகளை பொறுத்தவரை நாம் கடன் வாங்கும்போது ஆகட்டும் வங்கிகள் மக்களுக்கு வழங்கக்கூடிய பல்வேறு சேவைகளுக்கும் தனியாக பல்வேறு கட்டணங்களை வசூல் செய்கின்றன. இந்த கட்டணங்களுக்கு எல்லாம் முடிவுக்கட்டும் வகையிலான ஒரு நடவடிக்கையை எடுப்பதற்கு ஆர்பிஐ திட்டமிட்டு இருக்கிறதாம். எக்னாமிக் டைம்ஸ் இது தொடர்பான செய்தியை வெளியிட்டு இருக்கிறது .
இதன்படி இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள் அனைத்து வங்கிகளிடமும் அண்மையில் நடந்த ஒரு ஆலோசனைக் கூட்டத்தின் போது வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்படக்கூடிய சர்வீஸ் சார்ஜ்களை குறைக்க வேண்டும் என கூறி இருக்கிறார்களாம். டெபிட் கார்டுகளுக்கான சர்வீஸ் சார்ஜுகள் ,டெபிட் கார்டு மேலாண்மை கட்டணங்கள் ,மினிமம் பேலன்ஸை வைக்காமல் இருப்பதற்காக வசூல் செய்யப்படக்கூடிய அபராத கட்டணங்கள், தாமத பேமென்ட்களுக்காக வசூல் செய்யப்படும் கட்டணங்கள் மற்றும் பிற செயலாக்க கட்டணங்களை எல்லாம் குறைக்க வேண்டும் என அப்போது தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்தியாவில் அண்மைக்காலமாக சில்லறை கடன் வாங்கும் நபர்களின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கிறது. அதாவது சிறு தொழில் செய்பவர்கள், வாகன கடன்கன், தனிநபர் கடன்கள் மற்றும் குறைந்த தொகையை கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. வங்கிகளும் தற்போது இந்த வகை கடன்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் தருகின்றன.
இவ்வாறு குறைந்த வருமானம் கொண்டவர்கள் வங்கியில் கடன் வாங்கும் போது செயலாக்க கட்டணம் சர்வீஸ் கட்டணம் என பல்வேறு கட்டணங்கள் வசூல் செய்யப்படுகின்றன. இதனை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ஆர்பிஐ இப்படி ஒரு நடவடிக்கையை எடுத்திருக்கிறது . ஆனால் வங்கிகளை பொறுத்த வரை இந்த கட்டணங்கள் தான் அவர்களுக்கு பெரிய வருவாயை தருபவையாக இருக்கின்றன .
உதாரணமாக கடன்களுக்கு அந்த கடன் தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை வங்கிகளும் தனியார் நிதி நிறுவனங்களும் செயலாக்க கட்டணமாக வசூல் செய்கின்றன. அந்த வருமானத்திலேயே கை வைக்கும் வகையில் ஆர்பிஐ அறிவுரை அமைந்துள்ளது. ஆனால் வங்கிகள் இந்த கட்டணங்களை முழுவதுமாக நீக்காமல் மாற்று நடவடிக்கை எடுக்கலாம் அல்லது குறைக்கலாம் என சொல்லப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது



Click it and Unblock the Notifications