மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் உள்ள இரண்டு கூட்டுறவு வங்கிகளின் வங்கி உரிமத்தை ரத்து செய்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி புதன்கிழமை தெரிவித்துள்ளது. ஆர்பிஐ கடந்த சில வருடங்களாக நாட்டில் இருக்கும் அனைத்து வங்கிகளும் வங்கி விதிமுறைகளை கடைப்பிடிக்கிறதா..? உரிய நேரத்தில் முக்கிய கடன் விபரங்களை சமர்ப்பிக்கிறதா..? என பல காரணிகளில் ஆய்வு செய்து வருகிறது.
இந்தியாவில் வங்கிகளின் நிதி நிலைமை மிகவும் மோசமாக இருக்கும் வேளையில், இதை சரி செய்ய வேண்டும் என்பதற்காக அதிகப்படியான கண்காணிப்பு பணிகளை ஆர்பிஐ மேற்கொண்டது. இதனால் பல வங்கிகள் இந்த கண்காணிப்பில் மாட்டிக்கொண்டது மட்டும் அல்லாமல் பல வங்கிகளின் நிதி நிலை மோசமாக இருப்பதும் கண்டுப்படிக்கப்பட்டது.

ஆர்பிஐ பல வங்கிகளின் உரிமத்தை ஏற்கனவே ரத்து செய்துள்ள நிலையில் புதன்கிழமை அறிவிப்பு மூலம் மகாராஷ்டிர மாநிலத்தின் புல்தானா பகுதியை சேர்ந்த மல்காபூர் நகர்ப்புற கூட்டுறவு வங்கி லிமிடெட், மற்றும் கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் இயங்கி வந்த சுஷ்ருதி சௌஹர்தா சககார வங்கி நியாமிதா ஆகிய இரு கூட்டுறவு வங்கிகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த இரண்டு கூட்டுறவு வங்கிகளும் புதன்கிழமை வர்த்தக நேரம் முடிவடைந்ததிலிருந்து வங்கி நிர்வாகம் எவ்விதமான வணிகத்தை மேற்கொள்ள கூடாது என உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனை மகாராஷ்டிரா மற்றும் பெங்களூர் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி இரண்டு தனித்தனி அறிக்கைகளில் தெரிவித்துள்ளது.
மல்காபூர் நகர்ப்புற கூட்டுறவு வங்கி, சுஷ்ருதி சௌஹர்தா சககார வங்கி நியாமிதா ஆகிய இரு வங்கிகளிடமும் போதுமான மூலதனம் மற்றும் வருவாய் வாய்ப்புகள் இல்லை என்பதால் வங்கி உரிமத்தை ரத்து செய்யும் முடிவுக்கு ரிசர்வ் வங்கி வந்துள்ளது. இதோடு தற்போதைய நிதி நிலையில், இவ்வங்கிகளில் உள்ள டெபாசிட்தாரர்களுக்கு முழுமையாக பணத்தை செலுத்த முடியாது என்றும் ஆர்பிஐ கூறியது.
ஆர்பிஐ உத்தரவின் படி மல்காபூர் நகர்ப்புற கூட்டுறவு வங்கி, சுஷ்ருதி சௌஹர்தா சககார வங்கி நியாமிதா ஆகிய இரு வங்கிகளை மூடப்படம் வேளையில் ஒவ்வொரு டெபாசிட் வாடிக்கையாளரும், DICGC இன்சூரன்ஸ் பாதுகாப்பு கீழ் 5 லட்சம் ரூபாய் வரையிலான தொகையை பெற முடியும், 5 லட்சத்திற்கு மேல் பணத்தை வைத்திருப்பவர்களுக்கு நிதி இழப்பு ஏற்படும்.
ஆர்பிஐ வெளியிட்ட அறிவிப்பின் படி மல்காபூர் நகர்ப்புற கூட்டுறவு வங்கியின் 97.60 டெபாசிட்தாரர்களுக்கு முழு தொகையும் கொடுக்கப்பட்டது. இதற்காக 496.98 கோடி ரூபாய் DICGC கீழ் பட்டுவாடா செய்யப்பட்டு உள்ளது.
இதேபோல் பெங்களூர்-ஐ சேர்ந்த சுஷ்ருதி சௌஹர்தா சககார வங்கி நியாமிதா வங்கி 91.92 டெபாசிட்தாரர்களுக்கு முழு தொகையும் கொடுக்கப்பட்டது. இதற்காக 54.16 கோடி ரூபாய் DICGC கீழ் பட்டுவாடா செய்யப்பட்டு உள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!

13 ஆண்டுகளாக வேலை பார்த்தவரை ஒரே நொடியில் தூக்கி எறிந்த ஐடி நிறுவனம்: கண்ணீரில் சென்னை டெக்கி



Click it and Unblock the Notifications