புனே-வைச் சேர்ந்த ரூபாய் கூட்டுறவு வங்கியின் (Rupee Cooperative Bank) உரிமத்தை ரத்துச் செய்ததாக இந்திய ரிசர்வ் வங்கி இன்று அறிவித்தது, செப்டம்பர் 22, 2022 முதல் வங்கிச் செயல்பாடுகளை நிறுத்த உத்தரவிட்டது.
ரூபாய் கூட்டுறவு வங்கிக்கு "போதுமான மூலதனம் மற்றும் வருவாய் வாய்ப்புகள்" இல்லை என்பதால் வங்கியின் உரிமம் ரத்துச் செய்யப்பட்டதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு ரூபாய் கூட்டுறவு வங்கி, சரஸ்வத் வங்கியுடன் வங்கியுடன் இணைக்கத் திட்டமிடப்பட்டு ரிசர்வ் வங்கியின் கொள்கை அனுமதியைப் பெற்ற பிறகு தோல்வியடைந்த நிலையில் தற்போது இவ்வங்கி உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
ரூபே கூட்டுறவு வங்கி
ரூபே கூட்டுறவு வங்கி 64,000 பேருக்கு மேல் தங்களது டெபாசிட் தொகையை மொத்தம் ₹700 கோடியை திருப்பிச் செலுத்திய பின், சரஸ்வத் வங்கி இணைப்பிற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் 700 கோடி ரூபாய் வைப்பு நிதி வெளியேறிய நிலையில் வர்த்தக லாபங்கள் குறைந்த காரணத்தால் மறுப்புத் தெரிவித்தது.
ரிசர்வ் வங்கி
ரூபாய் கூட்டுறவு வங்கியின் வைப்புதாரர்கள் மற்றும் பொதுமக்களின் நலன்களுக்கு எதிராக உள்ளது, வங்கி அதன் தற்போதைய நிதி நிலையில் டெபாசிட்தாரர்களுக்குப் பணத்தை முழுமையாகத் திருப்பிச் செலுத்த முடியாது என்றும் ரிசர்வ் வங்கி அதன் உத்தரவில் கோடிட்டுக் காட்டியது.
5 லட்சம் ரூபாய் வரை
உரிமம் பெற்ற வங்கிகளில் பணம் வைத்திருக்கும் டெபாசிட்டர்கள் 5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு செய்யப்பட்டுள்ளனர். ரூபாய் கூட்டுறவு வங்கி கலைக்கப்பட்டதும், தற்போதுள்ள டெபாசிட்தாரர்கள் டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கியாரண்டி கார்ப்பரேஷன் அமைப்பிடமிருந்து டெபாசிட் காப்பீட்டுக் கோரிக்கையைப் பெற உரிமை பெறுவார்கள் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
99% பேருக்கு
99% க்கும் அதிகமான டெபாசிட்தாரர்கள் தங்கள் வைப்புத் தொகையின் முழுத் தொகையையும் பெறுவதற்கு உரிமை உடையவர்கள் என்று ஆர்பிஐ உத்தரவில் கூறப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 1% டெபாசிட்தாரர்கள் ₹5 லட்சத்துக்கும் அதிகமான வைப்பு தொகையை இழக்க நேரிடும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications