2024 முதல் 2025-ஆம் நிதியாண்டு மார்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் இந்த நிதியாண்டின் இறுதி நாளன்று வருமானவரித்துறை அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் வழக்கம் போல செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி அன்று பண்டிகை காலம் வருவதால் அன்றைய தினம் வங்கிகள் செயல்படுமா என்ற குழப்பம் நிலவியது.
நிதி அறிக்கையில் ஏற்படக்கூடிய முரண்பாடுகளை தவிர்க்கவும், 2024 முதல் 2025-ஆம் நிதியாண்டின் அனைத்து பரிவர்த்தனைகளும் அதே நாளில் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகவும், இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் மார்ச் 31-ஆம் தேதி அன்று வங்கிகள் திறந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. ஆனால் அன்றைய தினம் பல மாநிலங்களிலும் உள்ள வங்கிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

மார்ச் 31, 2025 அன்று ஏன் விடுமுறை வழங்கப்பட்டது?: இமாச்சலப் பிரதேசம் மற்றும் மிசோரம் தவிர கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் மார்ச் 31-ஆம் தேதி அன்று ரம்ஜான் பண்டிகைக்கு வங்கிகள் மூடப்படவிருந்தன.
மார்ச் 31, 2025 அன்று முடிவடையும் 2024-25-ஆம் நிதியாண்டிற்கான, ரசீதுகள் மற்றும் கொடுப்பனவுகள் உட்பட அரசின் அனைத்து நிதி பரிவர்த்தனைகளும் முறையாகக் கணக்கிடப்படுவதை உறுதி செய்வதற்காக அன்றைய தினம் வங்கிகள் திறந்திருக்க வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஒரு நிதியாண்டின் இறுதி பரிவர்த்தனைகள்: ஒவ்வொரு வருடமும் மார்ச் 31-ஆம் தேதி என்பது ஒரு நிதியாண்டின் முடிவைக் குறிக்கிறது. அதாவது அரசாங்க வருவாய், பணம் செலுத்துதல் மற்றும் பிற பரிவர்த்தனைகளும் புதிய நிதியாண்டு தொடங்குவதற்கு முன்பே முடிக்கப்பட வேண்டும்.
மார்ச் 31, 2025 அன்று எந்த வங்கிச் சேவைகள் கிடைக்கும்?: மார்ச் 31-ஆம் தேதி அன்று பின்வரும் வங்கிச் சேவைகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரி, ஜிஎஸ்டி, சுங்கம் மற்றும் கலால் வரிகள் உள்ளிட்ட அரசு வரி செலுத்துதல்கள்
ஓய்வூதிய கொடுப்பனவுகள் மற்றும் அரசு மானியங்கள், அரசு சம்பளம், அரசு திட்டங்கள் மற்றும் மானியங்கள் தொடர்பான பொது பரிவர்த்தனைகளைச் செய்ய முடியும்.
ஏப்ரல் 1, 2025 விடுமுறை: ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின்படி, மேகாலயா, சத்தீஸ்கர், மிசோரம், மேற்கு வங்கம், இமாச்சலப் பிரதேசம் மற்றும் மேகாலயா தவிர, பெரும்பாலான யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்களில் ஏப்ரல் 1 ஆம் தேதி வங்கிகள் மூடப்படும்.
அதோடு டிஜிட்டல் பரிவர்த்தனைகளை வழக்கம் போல செய்ய முடியும். ஆன்லைன் இணையதளங்கள் மற்றும் மொபைல் அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் பல்வேறு சேவைகளை பெற முடியும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications