இந்திய வங்கிகளில் கடந்த சில வருடங்களாகவே அதிகப்படியான கடன் மோசடி, விதிமுறைகளை மீறுதல், வங்கி கணக்கில் குளறுபடிகள் எனப் பிரச்சனைகளை ரிசர்வ் வங்கி கண்டுபிடித்துள்ளது.
இதை வேளையில் இந்தியா முழுவதும் வங்கி சேவைகள் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் விதமாகப் பல புதிய சேவைகளையும் கட்டமைப்புகளையும் அறிமுகம் செய்யப்பட்டது.
வங்கி சேவைகளின் விரிவாக்கத்தைப் பாதிக்காமல் ரிசர்வ் வங்கி நிர்வாக மேம்படுத்தல், கண்காணிப்பு பணிகளை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்தது. இதில் 5 NBFC வங்கிகள் விதிமுறைகளை மீறியது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
NBFC உரிமம் ரத்து
டிஜிட்டல் கடன் வழங்கும் திட்டத்தில் நியாயமான நடைமுறை குறியீடுகளை மீறியதாகவும், அவுட்சோர்சிங் தொடர்பான விதிமுறைகளை மீறியதாகவும் இந்திய ரிசர்வ் வங்கி 5 NBFCகளின் பதிவுச் சான்றிதழை (CoR) ரத்துச் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
5 NBFC-க்கள்
NBFC எனப்படும் வங்கியல்லாத நிதி நிறுவனங்களான UMB செக்யூரிட்டீஸ் லிமிடெட், அனாஷ்ரி ஃபின்வெஸ்ட், சந்தா ஃபைனான்ஸ் (Chadha Finance), அலெக்ஸி டிராகான் மற்றும் ஜூரியா ஃபைனான்சியல் சர்வீசஸ் ஆகிய நிறுவனங்களின் பதிவு உரிமம் ரத்து செய்துள்ளது ஆர்பிஐ.
ஆர்பிஐ விளக்கம்
5 NBFC நிறுவனங்களின் பதிவு உரிமத்தை RBI வழிகாட்டுதல்கள் மற்றும் நியாயமான நடைமுறைகள் குறியீட்டை மீறியதன் காரணமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக மூன்றாம் தரப்புப் பயன்பாடுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட டிஜிட்டல் கடன் நடவடிக்கைகளில் பொது நலனுக்குத் தீங்கு விளைவிப்பதை கண்டுபிடிக்கப்பட்டது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அதிக வட்டி
இந்த 5 நிறுவனங்கள் அதிக வட்டி வசூலிப்பது மூலம் ஆர்பிஐ விதிமுறைகளை மீறியது மட்டும் அல்லாமல், கடனை திரும்பப் பெறுவதில் வாடிக்கையாளர்களை (மக்களை) தேவையற்ற துன்புறுத்தலை அளித்துக் கடுப்படிக்கப்பட்டு உள்ளதும் விசாரணையில் ஆர்பிஐ கண்டுபிடித்துள்ளது.
ரிசர்வ் வங்கி
இந்தியாவில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும், குறிப்பாகக் கிராமப்புறம் மற்றும் வகைப்படுத்தாத துறையில் இருக்கும் மக்களுக்கு வங்கி சேவைகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக NBFC உருவாக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது. ஆனால் இன்று சில NBFC-க்கள் அதிக வட்டி வசூலிப்பது மட்டும் அல்லாமல் கடன் வசூலிப்பதற்காக மக்களைத் துன்புறுத்துவது வருத்தம் அளிக்கிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications