இந்திய வங்கிகளில் கடந்த சில வருடங்களாகவே அதிகப்படியான கடன் மோசடி, விதிமுறைகளை மீறுதல், வங்கி கணக்கில் குளறுபடிகள் எனப் பிரச்சனைகளை ரிசர்வ் வங்கி கண்டுபிடித்துள்ளது.
இதை வேளையில் இந்தியா முழுவதும் வங்கி சேவைகள் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் விதமாகப் பல புதிய சேவைகளையும் கட்டமைப்புகளையும் அறிமுகம் செய்யப்பட்டது.
வங்கி சேவைகளின் விரிவாக்கத்தைப் பாதிக்காமல் ரிசர்வ் வங்கி நிர்வாக மேம்படுத்தல், கண்காணிப்பு பணிகளை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்தது. இதில் 5 NBFC வங்கிகள் விதிமுறைகளை மீறியது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
NBFC உரிமம் ரத்து
டிஜிட்டல் கடன் வழங்கும் திட்டத்தில் நியாயமான நடைமுறை குறியீடுகளை மீறியதாகவும், அவுட்சோர்சிங் தொடர்பான விதிமுறைகளை மீறியதாகவும் இந்திய ரிசர்வ் வங்கி 5 NBFCகளின் பதிவுச் சான்றிதழை (CoR) ரத்துச் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
5 NBFC-க்கள்
NBFC எனப்படும் வங்கியல்லாத நிதி நிறுவனங்களான UMB செக்யூரிட்டீஸ் லிமிடெட், அனாஷ்ரி ஃபின்வெஸ்ட், சந்தா ஃபைனான்ஸ் (Chadha Finance), அலெக்ஸி டிராகான் மற்றும் ஜூரியா ஃபைனான்சியல் சர்வீசஸ் ஆகிய நிறுவனங்களின் பதிவு உரிமம் ரத்து செய்துள்ளது ஆர்பிஐ.
ஆர்பிஐ விளக்கம்
5 NBFC நிறுவனங்களின் பதிவு உரிமத்தை RBI வழிகாட்டுதல்கள் மற்றும் நியாயமான நடைமுறைகள் குறியீட்டை மீறியதன் காரணமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக மூன்றாம் தரப்புப் பயன்பாடுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட டிஜிட்டல் கடன் நடவடிக்கைகளில் பொது நலனுக்குத் தீங்கு விளைவிப்பதை கண்டுபிடிக்கப்பட்டது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அதிக வட்டி
இந்த 5 நிறுவனங்கள் அதிக வட்டி வசூலிப்பது மூலம் ஆர்பிஐ விதிமுறைகளை மீறியது மட்டும் அல்லாமல், கடனை திரும்பப் பெறுவதில் வாடிக்கையாளர்களை (மக்களை) தேவையற்ற துன்புறுத்தலை அளித்துக் கடுப்படிக்கப்பட்டு உள்ளதும் விசாரணையில் ஆர்பிஐ கண்டுபிடித்துள்ளது.
ரிசர்வ் வங்கி
இந்தியாவில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும், குறிப்பாகக் கிராமப்புறம் மற்றும் வகைப்படுத்தாத துறையில் இருக்கும் மக்களுக்கு வங்கி சேவைகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக NBFC உருவாக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது. ஆனால் இன்று சில NBFC-க்கள் அதிக வட்டி வசூலிப்பது மட்டும் அல்லாமல் கடன் வசூலிப்பதற்காக மக்களைத் துன்புறுத்துவது வருத்தம் அளிக்கிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications