மும்பை: இந்தியாவில் வங்கிகளின் செயல்பாடுகளை கண்காணித்து ஒழுங்குப்படுத்தும் ஒரு அமைப்பாக மத்திய ரிசர்வ் வங்கி இயங்கி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் உள்ள பொதுவுடைமை வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன.
வங்கி சாராத நிதி நிறுவனங்களும் கூட ரிசர்வ் வங்கியின் ஆணைக்கு இணங்க வேண்டும். அந்த வகையில் ரிசர்வ் வங்கி அனைத்து வங்கி மற்றும் நிதி நிறுவனங்களையும் கண்காணித்து தவறுகள் நடந்தால் அவற்றின் மீது நடவடிக்கைகள் எடுக்கும்.

ரிசர்வ் வங்கியின் விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி தற்போது ஐந்து கூட்டுறவு வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
1. மத்திய கூட்டுறவு வங்கி (Central Co-operative Bank)
2. தி வைஷ் கூட்டுறவு ஆதர்ஷ் வங்கி
3. இந்திர மகிளா சாஹகாரி வங்கி
4. சித்ரதுர்கா மாவட்ட கூட்டுறவு மத்திய வங்கி
5. சமர்த் சாஹகாரி வங்கி
ஆகிய ஐந்து வங்கிகளுக்கும் அபராதம் விதித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இதில் மத்திய கூட்டுறவு வங்கி, மோசடிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்வதில் தாமதம் செய்தது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இதன் காரணமாக அந்த வங்கிக்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கேஒய்சி விதிமுறைகளை சரியாக செயல்படுத்தவில்லை என்ற காரணத்திற்காக தி வைஷ் கூட்டுறவு ஆதர்ஷ் வங்கிக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதே போல இந்திர மகிளா சாஹகாரி வங்கிக்கு 75 ஆயிரம் ரூபாயும் ,சித்திர துர்கா மாவட்ட கூட்டுறவு மத்திய வங்கி மற்றும் சமர்த் சாஹகாரி வங்கிக்கு 50,000 ரூபாயும் அபராதம் விதித்துள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இதற்கிடையே ஏஸ் மணி (Ace Money) இந்தியா லிமிடெட் என்ற வங்கி சாராத நிதி நிறுவனத்திற்கான உரிமத்தை மத்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. டெல்லியின் வடமேற்கு பகுதிகளில் ஏஸ் மணி இந்தியா நிறுவனம் நிதி சேவைகளை வழங்கி வந்தது.
ஆனால் இது கடன்களை வழங்குவதில் ஒழுங்குமுறைகளை பின்பற்றவில்லை என குற்றம் சாட்டி அதன் உரிமத்தை ரத்து செய்து ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications