10 ஆண்டுகளில் அபார வளர்ச்சி.. இந்திய வங்கிகளை பாராட்டி தள்ளிய RBI ஆளுநர்.. அடுத்த திட்டம் என்ன..?

இந்தியாவில் உள்ள வங்கிகள், 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்போது மிகவும் பலமாகவும், பாதுகாப்பாகவும் உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா பெருமையுடன் தெரிவித்துள்ளார். எஸ்.பி.ஐ. வங்கி நடத்திய ஒரு முக்கியமான கூட்டத்தில் பேசிய அவர், வங்கிகளில் உள்ள பிரச்சனைகளை கண்டுபிடிப்பது, அவற்றைத் தீர்ப்பது மற்றும் வங்கிகளுக்கு அதிகப் பணம் கொடுப்பது போன்ற முக்கியமான சட்ட திட்டங்களை ரிசர்வ் வங்கி கொண்டு வந்ததால்தான் இந்த முன்னேற்றம் சாத்தியமானது என்றும் ஆளுநர் மல்ஹோத்ரா கூறியுள்ளார்.

இன்று, வங்கிகள் கொடுக்கும் கடன்களும், மக்கள் வங்கிகளில் சேமிக்கும் பணமும் (வைப்புத் தொகை) சுமார் 3 மடங்கு அதிகரித்துள்ளன. வங்கிகள் கையில் வைத்திருக்கும் பாதுகாப்பான பணமும் பலமடைந்துள்ளது. உதாரணமாக, வங்கிகள் அபாயங்களை சமாளிக்க வைத்திருக்க வேண்டிய முக்கியப் பணம் (CRAR) 2015-இல் 13.5% ஆக இருந்தது. ஆனால், இப்போது 2025 மார்ச் மாதத்தில் 17.5% ஆக உயர்ந்துள்ளது. இது வங்கிகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளன என்பதை காட்டுகிறது.

10 ஆண்டுகளில் அபார வளர்ச்சி.. இந்திய வங்கிகளை பாராட்டி தள்ளிய RBI ஆளுநர்.. அடுத்த திட்டம் என்ன..?

கடனை கட்டாமல் ஏமாற்றுவது குறைவு : வங்கிகளின் சொத்துக்களின் தரமும் வெகுவாக உயர்ந்துள்ளது. அதாவது, வங்கியில் கடன் வாங்கியவர்கள் பணத்தை கட்டாமல் ஏமாற்றுவது மிக மிகக் குறைந்துள்ளது. கடந்த 2018 மார்ச் மாதத்தில், வராக்கடன் மிக அதிகமாக, சுமார் 11.2% வரை உயர்ந்தது. ஆனால், தற்போது 2025 மார்ச் மாதத்தில் அது வெறும் 2.3% ஆக குறைந்துள்ளது. இதன் காரணமாக, வங்கிகளுக்கு கிடைக்கும் லாபமும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

2017-18 மற்றும் 2024-25 நிதியாண்டுகளுக்கு இடையில், வங்கிகள் தங்கள் சொத்துக்கள் மூலம் ஈட்டும் லாபம் 0.24% என்ற நஷ்டத்தில் இருந்து, இப்போது 1.37% என்ற லாபமாக மாறியுள்ளது. பங்குகளில் இருந்து கிடைக்கும் லாபம் 2% என்ற நிலையில் இருந்து, இப்போது 14% ஆக மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. இந்த அற்புதமான வளர்ச்சியைப் பார்க்கும் போது, வங்கிகளுக்கான சட்டதிட்டங்களை இன்னும் சுலபமாக்க வேண்டும் என்று ஆளுநர் வலியுறுத்தினார்.

RBI-யின் பாதுகாப்பு நடவடிக்கைகள் : ரிசர்வ் வங்கியின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பேசிய ஆளுநர் மல்ஹோத்ரா, "கடந்த 2015-ஆம் ஆண்டு சொத்துத் தர ஆய்வு, வங்கிகள் தவறு செய்தால் உடனே நடவடிக்கை எடுக்கும் PCA திட்டம், 27 பொதுத்துறை வங்கிகளை 12 ஆக குறைத்து ஒன்றிணைத்தது, கடன் கட்டாதவர்களை சமாளிக்க கடந்த 2016ஆம் ஆண்டில் கொண்டு வந்த திவால் சட்டம் போன்ற கடுமையான நடவடிக்கைகள்தான் இந்த வெற்றிக்கு பின்னணியில் உள்ளன. இந்த நடவடிக்கைகள்தான் கடந்த 10 ஆண்டுகளில் இந்திய வங்கி அமைப்பை பலப்படுத்தின.

வங்கிகள் மேலும் வளர்ச்சி அடையவும், புதுமைகளை செய்யவும், எளிதாக தொழில் செய்யவும் அதிக சுதந்திரத்தை ரிசர்வ் வங்கி வழங்கும். அதே சமயம், எந்தப் பிரச்சனையும் வராமல் நிதி நிலைத்தன்மை பாதுகாக்கப்படும் என்றும் ஆளுநர் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். 2047-க்குள் இந்தியாவை ஒரு முன்னேறிய நாடாக மாற்றும் லட்சிய இலக்குக்கு நிதித்துறை மிகவும் முக்கியம்" என்றும் அவர் கூறியுள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+