இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கும், இந்திய நிதித் துறையின் வளர்ச்சிக்கும் முக்கிய பங்கு வகிக்கும் இந்திய அமைப்புகளில் ஒன்று மத்திய ரிசர்வ் வங்கி.
கடந்த வெள்ளிக் கிழமை, மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ், சி என் பி சி ஆவாஸ் என்கிற சேனலுக்கு பேட்டி கொடுத்து இருந்தார்.
அந்த பேட்டியில், இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றம் காண்பதற்கும், தற்போது இந்தியப் பொருளாதாரம் இருக்கும் உண்மை நிலைக்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது எனச் சொல்லி இருக்கிறார் சக்தி காந்த தாஸ்.
முன்பே சொல்லி இருக்கிறேன்
இப்படி இந்தியப் பொருளாதாரத்தின் உண்மை நிலைக்கும், இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றம் காண்பதும் சம்பந்தம் இல்லாமல் இருப்பதை பணக் கொள்கை கமிட்டி (Monetary Policy Committee) கூட்டத்தின் போதும், வேறு சில முறையும் இதைப் பற்றிப் பேசி இருக்கிறேன் எனச் சொல்லி இருக்கிறார் சக்தி காந்த தாஸ். அதோடு, இந்த நிகழ்வு உலகம் முழுக்க நிலவி வருகிறது. இது இந்தியாவில் மட்டும் நடக்கும் விஷயம் அல்ல எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
லிக்விடிட்டி பிரச்சனை
உலகம் முழுக்க, நிறைய பணம் லிக்விடிட்டியாக பொருளாதாரங்களில் உட்செலுத்தப்படுகிறது. அது தான் பங்குச் சந்தையை அதி விரைவாக ஏற்றம் காணச் செய்து கொண்டு இருக்கிறது. இந்த பங்குச் சந்தை ஏற்றம், நிச்சயமாக, பொருளாதாரத்தின் உண்மை நிலைக்கு சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது என மீண்டும் அழுத்தமாகச் சொல்லி இருக்கிறார் ஆர்பிஐ ஆளுநர்.
ஒரு கரெக்ஷன் வரும்
எனவே பங்குச் சந்தைகளில் ஒரு கரெக்ஷன் வரும். அந்த கரெக்ஷன் எப்போது வரும் என்பதை என்னால் சொல்ல முடியாது. இந்தியாவில் நிதி நிலைத் தன்மையை (Financial Stability) உறுதி செய்ய மத்திய ரிசர்வ் வங்கி தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் எனச் சொல்லி இருக்கிறார் சக்தி காந்த தாஸ்.
6 ட்ரில்லியன் டாலர்
உலக பொருளாதாரத்தில், கொரோனா வைரஸ் பிரச்சனையால் ஏற்படும் தாக்கத்தை எதிர்கொண்டு சமாளிக்க, உலகின் பல நாட்டு மத்திய வங்கிகளும் இணைந்து, மொத்தம் 6 ட்ரில்லியன் டாலருக்கு மேல் நிதிச் சந்தையில் பணத்தை உட்செலுத்தி இருக்கிறார்களாம். வட்டி விகிதங்கள் கிட்டத்தட்ட 0 சதவிகிதத்துக்கு குறைத்து இருக்கிறார்களாம். இதில் இந்தியாவின் மத்திய ரிசர்வ் வங்கியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!



Click it and Unblock the Notifications