இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ், நாட்டின் வங்கித் துறையை மேலும் மேம்படுத்த அரசு கடன் வழங்குநர்களிடம் வலுவான பெருநிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கடுமையான நிர்வாக பற்றாக்குறை இண்மையால், அதிக அளவிலான வாராக்கடன், மூலதன பற்றாக்குறைகள், மோசடி மற்றும் போதிய இடர் மேலாண்மை நேர்ந்துள்ளது உள்ளிட்ட பிரச்சனைக்கு இது வழிவகுத்தது என்று தாஸ் அகமதாபாத்தில் நடந்த கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

அதிகளவிலான வாராக்கடன் களுக்கு வழிவகுக்கும் நிலையில் சரியான கட்டுப்பாடு முறைகள், வணிக மற்றும் இடர் நிர்வாகத்தின் சரியான கட்டுப்பாடு, தணிக்கை மற்றும் தனித்துவமான அறிக்கையிடல் முறைகளை நிறுவுவதன் மூலம் வாராக்கடனை குறைக்க திட்டமிட்டுள்ளது ஆர்.பி.ஐ.
மேலும் வங்கி துறையில் முக்கிய பங்கு வகிக்கும் மொத்தம் பொதுத்துறை வங்கிகள் சுமார் 60% அத்துறையை கட்டுப்படுத்துகின்றன.
வாராக்கடன்களின் நிலை சமீபத்தில் குறைந்து விட்டாலும், ஒதுக்கீடு பாதுகாப்பு விகிதம் ஒரு வருடத்திற்கு முன்பு 48.3% இலிருந்து 60.5%-ஆக உயர்ந்துள்ளது. இது வங்கி அமைப்பில் மூலதன போதுமான விகிதம் பாசல் தேவைகளுக்கு மேலாக நகர்ந்துள்ளது எனவும் கூறியுள்ளார்.
இந்தியாவில் வங்கித் துறை உலகில் அழுத்தப்பட்ட சொத்துகளின் மிக உயர்ந்த விகிதத்தைக் கொண்டுள்ளது எரிசக்தி மற்றும் எஃகு போன்ற துறைகளில் கணிசமான அளவு வாராக்கடன்கள் உள்ளன.
இது ஒரு புறம் இருந்தாலும், கேர் ரேட்டிங்க்ஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, 17 வங்கிகள் வாராக்கடன் அளவு 10 சதவிகிதத்தை தாண்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதே ஐ.டி.பி.ஐ, யூகோ வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வாராக்கடன் 19.9 சதவிகிதம் அளவுக்கும், இதே ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் வாராக்கடன் அளவு 10 சதவிகிததிற்கு குறைவாகவும், இந்தியன் பேங்க், கனரா பேங்க் உள்ளிட்ட வங்கிகளின் வாராக்கடன் 2 சதவிகிததிற்கு குறைவாகவும், இதே 8 வங்கிகள் 2- 5% வாராக்கடனும், இதே 5 வங்கிகளின் வாராக்கடன் 5-10%- மாகவும் உள்ளதாக வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த நிதியாண்டின் இறுதியில் 9.66 லட்சம் கோடி மதிப்புள்ள மொத்த செயல்படாத சொத்துக்கள் (NPA) அதிகரித்துள்ளதாகவும், இது முந்தைய ஆண்டு 6.71 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இந்த நிலையில் இந்த விகிதமானது இன்னும் அதிகரித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications