இந்திய மக்களும், பொருளாதார வல்லுனர்களும் டிசம்பர் மாதம் நடக்கும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் நாணய கொள்கை கூட்டத்தையும், அதை தொடர்ந்து நடக்கும் ஆர்பிஐ நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகளுக்காக காத்திருக்கும் வேளையில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா திங்கள்கிழமை முன்னணி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளார். அடுத்து நடக்கும் நாணய கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதத்தை மேலும் குறைக்க வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்தார். இது பொதுமக்கள், தொழிலதிபர்கள், வீட்டுக் கடன் எடுப்பவர்கள் என அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

அக்டோபர் மாதம் நடைபெற்ற MPC கூட்டத்தில் வட்டி விகிதத்தை குறைக்க இடம் இருப்பதாக தெளிவாக தெரிவிக்கப்பட்டதாக ஜீ தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறினார். அதன் பிறகு வந்த பொருளாதார தரவுகளும் வட்டி விகிதம் குறைப்பதற்கான சாத்தியத்தை எந்த விதத்திலும் குறைத்துவிடவில்லை என்று அவர் உறுதிப்படுத்தினார்.
மேலும் இறுதியாக "வட்டி விகிதத்தை குறைக்க இடம் நிச்சயம் உள்ளது. ஆனால் அடுத்த கூட்டத்தில் நாணய கொள்கை குழு மட்டுமே இதை இறுதி செய்யும், இக்குழுவின் முடிவைப் பொறுத்ததே வட்டி குறைப்பிற்கான அறிவிப்பை வெளியிட முடியும்" என்று சஞ்சய் மல்ஹோத்ரா விளக்கினார்.
இந்திய ரிசர்வ் வங்கி 2025ஆம் ஆண்டின் முதல் பாதியில் MPC குழு மொத்தம் 100 அடிப்படை புள்ளிகள் அதாவது 1 சதவீதம் வரையிலான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு வட்டி குறைப்புகள் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், அமெரிக்கா, ஐரோப்பிய மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை குறைத்திருக்கும் வேளையில் டிசம்பர் மாத கூட்டத்தில் ஆர்பிஐ வட்டி விகிதங்களை குறைக்கலாம்.
அக்டோபர் கூட்டத்தில், இந்தியாவில் பணவீக்கம் அளவு குறைவாக இருக்கும் காரணத்தால் எதிர்காலத்தில் வட்டி விகிதத்தை குறைக்க வாய்ப்பு இருப்பதாக MPC குழு உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர். கிட்டத்தட்ட இதே நிலையை தான் தற்போது ரிசர்வ் வங்கியின் கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா-வும் தனது பேட்டி மூலம் உணர்த்துகிறார்.
இந்தியாவில் பணவீக்க விகிதம் தற்போது குறைந்து வருவதால் வட்டி விகிதத்தை மேலும் குறைக்க ரிசர்வ் வங்கிக்கு இடம் உள்ளது என்று பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர். பணவீக்கம் கட்டுக்குள் இருக்கும் போது வட்டி விகிதத்தை குறைப்பது பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும். வங்கிகள் கடன் வட்டியை குறைத்து, தொழில் முதலீடு, வீட்டுக் கடன், வாகனக் கடன் ஆகியவற்றை எளிதாக்கும்.
பொதுமக்களுக்கு என்ன பலன்?
வட்டி விகிதம் குறைந்தால் வங்கிகள் மக்களுக்கும், நிறுவனங்களுக்கும் கொடுக்கும் கடன் வட்டி குறையும். வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் ஆகியவற்றின் மாதத் தவணை (EMI) குறையும். மேலும் நிறுவனங்கள் குறைந்த வட்டியில் கடன் பெற்று விரிவாக்கம் செய்யலாம். இது புதிய வேலை வாய்ப்புகளையும் பொருளாதார வளர்ச்சியையும் அதிகரிக்கும். இதேபோல் ஆர்பிஐ சேமிப்பு கணக்கு, வைப்பு நிதிக்கான வட்டி விகிதமும் சற்று குறையலாம்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications