அதானி குழும பங்குகள் பெரிய அளவிலான சரிவை பதிவு செய்த நிலையில், இக்குழுமத்திற்குக் கடன் கொடுத்த வங்கிகள், நிதி அமைப்புகள் குறித்துப் பல கேள்விகள் எழுந்து வரும் நிலையில் MPC முடிவுகளை வெளியிட்ட பின்பு ஆர்பிஐ கவர்னர் மற்றும் MPC குழு அதிகாரிகள் செய்தியாளர்களைச் சந்தித்த போது அதானி குழுமம் குறித்துப் பேசியுள்ளார்.
ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று வெளியிட்ட இரு மாத நாணய கொள்கை முடிவுகளை வெளியிட்ட நிலையில், அடுத்த இரு மாதத்திற்கு ரெப்போ விகிதம் 0.25 சதவீதம் உயர்ந்து 6.50 சதவீதமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் அனைத்து கடன்களுக்குமான வட்டி விகிதம் உயரும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் அதானி குழுமம் குறித்துப் பேசியுள்ளார்.
ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்கள் சந்திப்பின் போது தற்போது சந்தையில் நிலவும் அனைத்து கேள்விக்கான அடிப்படையே அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு சரிவது தான். ஆனால் வங்கிகள் ஒரு நிறுவனத்தின் சந்தை மதிப்பு வைத்து கடன் அளிப்பது இல்லை. ஆனால் வங்கிகள் ஒரு நிறுவனத்தின் பலம் மற்றும் அடிப்படையை நம்பி கடன் அளிக்கிறது.
அப்ரைசல் முறை
மேலும் இந்திய வங்கிகளின் அப்ரைசல் முறை கடந்த சில வருடத்தில் பெரிய அளவில் மேம்பட்டு உள்ளது எனவும் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
சக்திகாந்த தாஸ்
நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டேன். ஆர்பிஐ ஒரு தனிப்பட்ட முறையில் மதிப்பிடும், ரேட்டிங் ஏஜென்சி தனிப்பட்ட முறையில் மதிப்பிடும் என்றும் சக்திகாந்த தாஸ் விளக்கியுள்ளார்.
இந்திய வங்கி அமைப்பு
தற்போது இந்திய வங்கி அமைப்பின் பலம், அளவு ஆகியவை சிறப்பாக உள்ளது. ஆர்பிஐ ஏற்கனவே அதானி குழுமம் குறித்து அறிக்கை வெளியிட்டு உள்ளது. தற்போது கூடுதலாகப் பேச எதுவுமில்லை, மேலும் ஒரு தனிப்பட்ட விஷயத்தைப் பொதுத்தளத்தில் ஆர்பிஐ எப்போதும் விவாதிக்காது என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
வங்கி துறை மற்றும் NBFC துறை
இந்திய வங்கிகளின் பலத்தையும், தரத்தையும் மேம்படுத்துவதற்கு ஆர்பிஐ கடந்த 3-4 வருடத்தில் பல முக்கியமான விஷயங்களைச் செய்துள்ளது. இந்த நிலையில் இந்திய வங்கி துறை மற்றும் NBFC துறையும் வலிமையாக உள்ளது எனக் கூற விரும்புகிறேன் எனவும் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
கடன் வெளிப்பாடு
ரிசர்வ் வங்கி, இந்தியாவில் இயங்கி வரும் உள்நாட்டு வங்கிகளிடம் அதானி குழும நிறுவனங்களிடம் இருக்கும் கடன் வெளிப்பாடு குறித்த விவரங்களை சில நாட்களுக்கு முன்பு கேட்டது. இதைத் தொடர்ந்து எஸ்பிஐ, எல்ஐசி உட்பட அனைத்து வங்கிகளும் அதானி குழுமம் கொடுத்த கடனுக்கு விபரங்களைச் சமர்ப்பித்தது.
ஆர்பிஐ அறிக்கை
இதைத் தொடர்ந்து ஆர்பிஐ வெளியிட்ட அறிக்கையில் இன்று நாட்டின் வங்கி அமைப்பு மீள்தன்மை உடனும், நிலையானதாகவும் இருப்பதாகத் தெரிவித்தது. மேலும் போதுமான மூலதன அளவு, சொத்துத் தரம், பணப்புழக்கம், ப்ரொவிஷன் பாதுகாப்பு மற்றும் லாபம் தொடர்பான பல்வேறு அளவீடுகள் ஆரோக்கியமாக உள்ளது.
பெரிய கடன்கள்
வங்கிகளும் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட Large Exposure Framework வழிகாட்டுதல்களின் படி இணங்குகிறது என்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி Central Repository of Information on Large Credits என்ற தனி டேட்டா பேஸ்-ஐ வைத்துள்ளது. இந்த டேட்டாபேஸ்-ல் 5 கோடி ரூபாய்க்கு அதிகம் கடன் வெளிப்பாடு கொண்ட அனைத்து கடன் விபரங்களையும் சேகரிக்கப்பட்டு நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது என ஆர்பிஐ அறிக்கை வெளியிட்டது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications