இந்தியாவில் அனைத்து வங்கிகளையும் கட்டுப்படுத்தும் ஒரு அமைப்பாக இந்திய ரிசர்வ் வங்கி செயல்பட்டு வருகிறது. வங்கிகள் விதிமுறைகளை மீறி செயல்பட்டால் ரிசர்வ் வங்கி அதற்கு அபராதம் விதிக்கும்.
இந்நிலையில் ரிசர்வ் வங்கி எஸ்பிஐ மற்றும் ஜனா ஸ்மால் பைனான்ஸ் பேங்க் ஆகிய வங்கிகளுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. வெள்ளிக்கிழமை அன்று இது தொடர்பாக ஆர்பிஐ வெளியிட்ட அறிவிக்கையில் ஆர்பிஐ-யின் குறிப்பிட்ட சில விதிமுறைகளை இந்த வங்கிகள் பின்பற்றவில்லை எனக் கூறி இந்த அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது என தெரிவித்துள்ளது.

எஸ்பிஐ வங்கிக்கு ரிசர்வ் வங்கி 1, 72 ,80, 000 ரூபாயை அபராதமாக விதித்து இருக்கிறது. கடன் வழங்குதல், வாடிக்கையாளர் பாதுகாப்பு , நடப்பு கணக்குகளை தொடங்குவது ஆகிய மூன்று பிரிவுகளிலும் ஆர்பிஐயின் குறிப்பிட்ட் சில விதிமுறைகளை எஸ்பிஐ முறையாக பின்பற்றவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த விதிமுறை மீறலுக்காக எஸ்பிஐ வங்கிக்கு 1, 72, 80, 000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கிக்கு 1 கோடி ரூபாயை ஆர்பிஐ அபராதமாக விதித்துள்ளது. வங்கி ஒழுங்குமுறை சட்டம் 1949இல் குறிப்பிட்ட சில விதிமுறைகளை இந்த வங்கி பின்பற்றவில்லை என ஆர்பிஐ குற்றம் சாட்டியிருக்கிறது. நாட்டிற்கான தேசிய நிதிக் கொள்கையை உருவாக்குவது, செயல்படுத்துவது மற்றும் கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளை ஆர்பிஐ மேற்கொள்கிறது. இந்தியாவில் செயல்படும் அனைத்து வங்கிகளும் ஆர்பிஐ-இன் கட்டுப்பாட்டின் கீழ் தான் செயல்படுகின்றன.
அந்த வகையில் வங்கிகள் முறைப்படி செயல்படுவது அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றுவது உள்ளிட்டவற்றை ஆர்பிஐ தான் கண்காணிக்கிறது. இந்த விதிமுறைகளை வங்கிகள் மீறும் போது ஆர்பிஐ அதில் தலையிட்டு அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
முன்னதாக ரிசர்வ் வங்கி 5 கூட்டுறவு வங்கிகளுக்கு அபராதம் விதித்தது. தமிழ்நாட்டை சேர்ந்த நிக்கோல்ஷன் கூட்டுறவு வங்கிக்கு 1.5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடன் வழங்கும் நடைமுறைகளில் கேஒய்சி நடைமுறைகளை முறையாக பின்பற்றவில்லை என்ற புகாரின் பேரில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு சென்ட்ரல் கூட்டுறவு வங்கி, கர்நாடகாவை சேர்ந்த விஸ்வகல்யான் சஹாகரா வங்கி நியத், ஸ்ரீ ஹரிஹரேஸ்வர கூட்டுறவு வங்கி ஆகியவற்றுக்கும் தலா 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்ட்ராவின் ஸ்ரீ வரானா சஹாகாரி வங்கி மீதும் அபராதம் விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications