சமீபத்திய காலமாக வங்கித் துறையில் கடுமையான சீரமைப்பு பணிகளை இந்திய ரிசர்வ் வங்கி எடுத்து வருகின்றது.
அந்த வகையில் தற்போது இரண்டு கூட்டுறவு வங்கிகளுக்கு கடுமையாக கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அது என்ன கட்டுப்பாடு, இதனால் யாருக்கு என்ன பலன்? என்ன பாதிப்பு? இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன? ஏன் ரிசர்வ் வங்கி இப்படி ஒரு நடவடிக்கையினை எடுத்துள்ளது. வாருங்கள் பார்க்கலாம்.
ரய்காட் சஹாகரி வங்கி
மோசமான நிதி நிலையை காட்டி இரண்டு கூட்டுறவு வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
முன்னதாக திங்கட்கிழமையன்று மும்பையில் இயங்கி வரும் ரய்காட் சஹாகரி வங்கி. இந்த வங்கியில் பணம் எடுக்கவும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஏனெனில் இவ்வங்கியின் நிதி நிலை அறிக்கை தொடர்ந்து மோசமாகி கொண்டே வருகிறது. இதனால் வாடிக்கையாளர்களின் நலன் பாதிக்கப்படும் என ரிசர்வ் வங்கி சந்தேகப்படுகின்றது.
பணம் எடுக்க & போட கட்டுப்பாடு
இதனால் வாடிக்கையாளர்களின் நலன் கருதி, வாடிக்கையாளர்கள் 15,000 ரூபாய்க்கு மேலாக பணம் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அது மட்டும் அல்ல புதியதாக வாடிக்கையாளர்களிடம் இருந்து டெபாசிட் பெறவும் கூடாது என ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.
அது மட்டும் அல்ல ராய்காட் கூட்டுறவு வங்கிக்கு புதியதாக கடன் வழங்குவதற்கும், முதலீடு செய்வதற்கும் தடை விதிகப்பட்டது.
இன்று இரு வங்கிகளுக்கு கெடுபிடி
இந்த நிலையில் இன்று கர்நாடகாவை சேர்ந்த ஸ்ரீ மல்லிகார்ஜூன பட்டான சககாரி வங்கி நியாமிதா மற்றும் மகாராஷ்டிராவை சேர்ந்த நாசிக் ஜில்லா கிர்னா சக்காரி வங்கி ஆகியவையும் அடங்கும்.
மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கைகளின் படி, இந்த வங்கிகளுக்கான கட்டுப்பாடுகள் ஆறு மாதங்களுக்கு அமலில் இருக்கும்.
டெபாசிட் இன்சூரன்ஸ்
நாசிக் ஜில்லா கிர்னா சக்காரி வங்கியின் மீது கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், இவ்வங்கியின் 99.87% டெபாசிட் தாரர்கள் டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கியாரண்டி கார்ப்பரேஷன் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர் என ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதே ஸ்ரீ மல்லிகார்ஜூன பட்டான சககாரி வங்கி நியாமிதா வங்கியில் 99.53% பேர் முழுமையாக காப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
டெபாசிட் கடனுக்கு அனுமதி
வங்கியில் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு அனைத்து சேமிப்பு மற்றும் நடப்பு கணக்குகள் அல்லது டெபாசிட்டர்களுக்கு எந்த கணக்குகளிலும் உள்ள மொத்த இருப்பில் இருந்து எந்த தொகையும் இல்லை. ஆக அப்படி இருந்தால் திரும்ப பெற அனுமதிக்கப்படலாம். அதே சமயம் டெபாசிட் தாரர்களுக்கு எதிராக கடன் வழங்க அனுமதிக்கப்படுகின்றது.
மேம்படும் வரை கட்டுப்பாடு
இவ்விரு வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி எந்த கடனையும் வழங்க கூடாது. முதலீட்டினையும் புதுபிக்க கூடாது எனவும், இந்த இரு வங்கிகளின் நிதி நிலை மேம்படும் வரை கட்டுப்பாடுகளுடன் வங்கி வணிகத்தினை தொடரலாம் என தெரிவிதுள்ளது.
More From GoodReturns

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

13 ஆண்டுகளாக வேலை பார்த்தவரை ஒரே நொடியில் தூக்கி எறிந்த ஐடி நிறுவனம்: கண்ணீரில் சென்னை டெக்கி

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!



Click it and Unblock the Notifications