பணவீக்கம் என்ற ஒற்றை சொல், இன்று உலகினை எந்தளவுக்கு பதம் பார்த்து வருகின்றது, என்பதை நாம் அனுதினமும் செய்திகள் மூலம் படித்து வருகின்றோம். இதனால் தான் உலக வங்கிகள் பலவும் வட்டி விகிதத்தினை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் தலைவர் சக்தி காந்த தாஸ், பணவீக்க விகிதம் தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதத்தில் 7% கீழாக இருக்கலாம் என கணித்துள்ளார். இதே கடந்த செப்டம்பர் மாதத்தில் 7.4% ஆக இருந்தது.
ஆகஸ்ட் மாதத்தில் 7% ஆக இருந்தது. இது தொடர்ந்து உணவு மற்றும் அதிகரித்து வரும் எனர்ஜி பொருட்களுக்காக செலவினங்கள் உச்சத்தில் இருந்து வந்த நிலையில் பணவீக்கமும் உச்சத்தில் இருந்து வருகின்றது.
மாற்றம் தேவையில்லை
கடந்த 6 - 7 மாதங்களாகவே பணவீக்கத்தினை கட்டுக்குள் வைக்க மத்திய அரசும், மத்திய வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தன, பணவீக்கமானது மீண்டும் குறையத் தொடங்கியுள்ளது. இது கடந்த அக்டோபர் மாதத்தில் 7% மேலாக காணப்பட்டது. ஆக பணவீக்க இலக்கில் எந்த மாற்றமும் செய்ய வேண்டிய அவசியமில்லை.
வளர்ச்சி எதிர்பார்ப்பு
ரிசர்வ் வங்கியிடம் மத்திய அரசு பணவீக்க இலக்கினை 2 - 6% குள்ளாக வைக்க கேட்ட நிலையில், மேக்ரோஎக்னாமிக் பொருளாதார வளர்ச்சி கணிப்புகள் வலுவாக உள்ளன. இது எதிர்காலத்தில் நல்ல வளர்ச்சியினை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் பணவீக்கம் மீண்டும் குறையலாம் என்றும் கூறியுள்ளார்.
பணவீக்கத்தினை கட்டுக்குள் வைக்க?
பணவீக்க விகிதம் திங்கட்கிழமையன்று வெளியாகலாம் என எதிர்பார்கப்படுகிறது. இது 7% கீழாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் பணவீக்கம் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களில் ஒன்றாக உள்ளது. அவசியம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அது சரியாக செயல்பட்டுள்ளது.
அமெரிக்காவினை விட சிறப்பாக இருக்கலாம்?
அமெரிக்காவின் பணவீக்க விகிதத்தினை விட இந்தியாவின் பணவீக்க விகிதம் சிறப்பாக இருக்கலாம். அமெரிக்காவில் கடந்த அக்டோபர் மாத விக்தமானது கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு 8% கீழாக குறைந்துள்ளது. எனினும் பணவீக்கத்திற்கு எதிரான போராட்டம் முடியவில்லை என்று தாஸ் எச்சரித்துள்ளார்.
சந்தையில் தாக்கம் இருக்கலாம்
பணவீக்கம் விகிதம், சர்வதேச தரவுகள், அன்னிய முதலீடுகள் என பலவும் வரும் வாரத்தில் பங்கு சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது உள்நாட்டு முதலீட்டாளார்களின் மத்தியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக வரவிருக்கும் நாட்களில் சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டும் உச்சம் தொடலாம்?
கடந்த வெள்ளிக்கிழமையன்றே சென்செக்ஸ் 1181.31 புள்ளிகள் அல்லது 1.91% ஏற்றம் கண்டு, 61,795.04 ஆக முடிவடைந்தது. இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 18ம் தேதியன்று 61,765.59 புள்ளிகளையும் எட்டியிருந்தது. தற்போது அந்த லெவலை உடைத்துள்ள நிலையில், இது வரும் நாட்களில் மீண்டும் உச்சம் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீடு அதிகரிக்கலாம்
சர்வதேச அளவிலும் பணவீக்கம் என்பது சற்றே மிதமாக தொடங்கியுள்ள நிலையில், சர்வதேச சந்தைகள் ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இந்திய சந்தையும் ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அன்னிய முதலீடுகள் சந்தையில் நேர்மறையாக தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: சத்தமில்லாமல் லாபம் பார்க்கும் ரஷ்யா!! டிரம்ப் எடுத்த முடிவால் புதினுக்கு கொண்டாட்டம்!!

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு



Click it and Unblock the Notifications