இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை குழு, ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
அதேபோல் SDF விகிதம் 5.15 சதவீதமாகவும், MSF விகிதம் மற்றும் வங்கி விகிதம் 5.65 சதவீதமாகவும் மாற்றியமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரெப்போ வட்டி மாற்றத்தால் இந்திய பங்குச்சந்தையில் தாக்கம் ஏற்பட்டதா? என்னென்ன தாக்கம் ஏற்பட்டது என்பதை பார்ப்போம்.
பங்குச்சந்தை
ரெப்போ வட்டி விகித மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகும் முன் இந்திய பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 250 புள்ளிகள் வரை உயர்ந்திருந்த நிலையில் வட்டி விகித மாற்றம் குறித்த அறிவிப்புக்கு பின் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. தற்போதும் கிட்டத்தட்ட அதே நிலையில் தான் பங்குச்சந்தை உள்ளது. தேசிய பங்குச்சந்தையின் நிப்டியிலும் பெரிய மாற்றம் இல்லை. மாலையில் மாற்றம் ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
இந்திய ரூபாய் மதிப்பு
ரெப்போ வட்டி விகித உயர்வு குறித்த அறிவிப்பை அடுத்து அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தற்போது 79.0575 என வர்த்தமாகி வருகிறது.
எஸ்பிஐ-ஐசிஐசிஐ
ரெப்போ வட்டி விகித உயர்வு குறித்த அறிவிப்பால் இன்றைய பங்குச்சந்தையில் ஐசிஐசிஐ பங்குகளின் விலை சுமார் இரண்டு சதவிகிதம் உயர்ந்துள்ளது. அதேபோல் எஸ்பிஐ பங்குகள் 1.48 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கியின் கவர்னர்
ரெப்போ வட்டி விகித மாற்ற அறிவிப்புக்கு பின் இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், 'உலக பொருளாதாரத்தின் தொடர்ச்சியான அதிர்வுகள், இந்திய பொருளாதாரத்தையும் பாதிக்கின்றன என்று தெரிவித்தார். இருப்பினும், உலகில் வேகமாக வளரும் பொருளாதாரத்தில் இந்தியாவும் இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
உள்நாட்டு பொருளாதாரம்
டெர்ம் டெபாசிட் விகிதங்களின் உயர்வு நிதித் துறைக்கான பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்று கூறிய சக்திகாந்த தாஸ், சமையல் எண்ணெய் விலை மேலும் குறையும் என்றும் தெரிவித்தார். மேலும் உள்நாட்டு பொருளாதார நடவடிக்கைகள் விரிவடைவதற்கான அறிகுறிகள் இருப்பதாக தெரிவித்தார்.
மூன்று முறை உயர்வு
மத்திய வங்கி வங்கிகளுக்கு கடன் வழங்கும் வட்டி விகிதம் என்று கூறப்படும் ரெப்போ விகிதத்தை நடப்பு நிதியாண்டில் ரிசர்வ் வங்கி மூன்றாவது முறையாக உயர்த்தியுள்ளது. ரிசர்வ் வங்கி மே மாதம் ரெப்போ விகிதத்தை 40 அடிப்படை புள்ளிகளும், ஜூன் மாதத்தில் 50 அடிப்படை புள்ளிகளும் உயர்த்திய நிலையில் தற்போது மேலும் 50 அடிப்படை புள்ளிகளை உயர்த்தியுள்ளது.
More From GoodReturns

டிரம்ப் கொடுத்த ஸ்பீச்: ரத்தக்களரியான பங்குச் சந்தை? சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி?

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications