இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளும், நிதி நிறுவனங்களும் ஒழுங்குமுறை விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் கடைப்பிடித்து வருகிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்து வரும் வேளையில் கடந்த 2 மாதங்களாக தனியார் வங்கிகள், பொதுத்துறை வங்கிகள் என வித்தியாசம் இல்லாமல் விதிமுறைகளை கடைப்பிடிக்காத வங்கிகள் மீது அபராதம் விதித்து வருகிறது.
இந்திய ரிசர்வ் வங்கி கடந்த சில மாதங்களாக கூட்டுறவு வங்கிகளை கடுமையான கட்டுப்பாடுகளின் கீழ் கண்காணித்து பல வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்து மக்களின் டெபாசிட் பணத்தை காப்பாற்றியது. தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரையில் பல கூட்டுறவு வங்கிகள் மீது ஆர்பிஐ நடவடிக்கை எடுத்தது.

இந்த நிலையில் ஆர்பிஐ தற்போது தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளை கண்காணிக்க துவங்கியுள்ளது. இப்படி வெள்ளிக்கிழமை வெளியான ஆர்பிஐ அறிவிப்பில் 3 முன்னணி வங்கிகளுக்கு சுமார் 10.34 கோடி ரூபாய் அபராதம் விதித்து அனைத்து வங்கி நிர்வாகங்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை வங்கி ஒழுங்குமுறை விதிகளை கடைப்பிடிக்காத காரணத்தால் சிட்டிபேங்க், பேங்க் ஆப் பரோடா, இந்தியன் ஓவர்சீயஸ் வங்கி ஆகியவற்றின் மீது மொத்தமாக 10.34 கோடி ரூபாய் அபராதம் விதித்தாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதில் முக்கியமாக சிட்டிபேங்க் மீதி அதிகப்படியாக 5 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. டெபாசிட் செய்யும் மக்களுக்கு திட்டம் குறித்து போதிய விளக்கம் கொடுக்க தவறியது, நிதியியல் சேவைகளை வெளி நிறுவனங்களுக்கு அவுட்சோர்சிங் செய்யும் போது சரியான நடைமுறையை பின்பற்றாத காரணத்தால் ஆர்பிஐ 5 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
இதை தொடர்ந்து பேங்க் ஆப் பரோடா மீது 4.34 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இவ்வங்கி அதிகப்படியான வெளிப்பாடு கொண்ட வர்த்தகத்திற்கு சென்டரல் ரெபாசிட்டரி உருவாக்குவதில் விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தால் 4.34 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
கடைசியாக சென்னையை தலைமையிடமாக கொண்டு இந்தியா முழுவதும் இயங்கி வரும் இந்தியன் ஓவர்சிஸ் வங்கி மீது 1 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இவ்வங்கி கடன் மற்றும் அட்வான்ஸ் சேவை அளிப்பதில் விதிமுறைகளை சரியாக பின்பற்றாத காரணத்தால் இந்த அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
3 வங்கிகள் மீதும் ஒழுங்குமுறை விதிகளை பின்பற்றாத காரணத்தால் மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது, இதனால் வங்கியில் பணத்தை டெபாசிட் செய்துள்ளவர்களுக்கு எவ்விதமான பிரச்சனையும் இல்லை.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications