இந்தியாவின் தனியார் துறையை சேர்ந்த ஒரு வங்கி தான் கர்நாடக வங்கி. மங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த கர்நாடகா வங்கிக்கு ரிசர்வ் வங்கி 1.2 கோடி ரூபாய் அபராதத்தினை விதித்துள்ளது.
இது சொத்து வகைப்படுத்துதல், வேறுபாடு மற்றும் விதிமுறைகளை பின்பற்றததற்காக கர்நாடக வங்கிக்கு இந்த அபராதத்தினை விதித்துள்ளது ரிசர்வ் வங்கி.
இது 1949ம் ஆண்டு வங்கி ஒழுங்குமூறை சட்டத்தின் பிரிவு 47 A (1) (C) மற்றும் 46(4) (I) விதிகளின் கீழ் ரிசர்வ் வங்கியில் அனுமதிக்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த வங்கிக்கு நோட்டீஸ் அனுப்பியதோடு, அறிவுரையும் வழங்கப்பட்டது. ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா கர்நாடாக வங்கிக்கு மட்டும் அல்ல, பேங்க் ஆப் இந்தியா மற்றும் சரஸ்வத் கோ ஆப்ரேட்டிவ் பேங்க் ஆப் இந்தியாவுக்கும் சேர்த்து 6.50 கோடி ரூபாய் அபாரத்தினை விதித்துள்ளது.
இது அதிகபட்சமாக பேங்க் ஆப் பரோடாவுக்கு 5 கோடி ரூபாயும், இதே கர்நாடாக வங்கிக்கு 1.2 கோடி ரூபாயும், இதே சரஸ்வத் கோ ஆப்ரேட்டிவ் பேங்க் ஆப் இந்தியாவுக்கு 30 லட்சம் ரூபாயும் அபராதம் விதித்துள்ளது.
இந்தியாவினை பொறுத்த வரையில், தனியார் வங்கிகளும் சரி, பொதுத்துற வங்கிகளும் சரி என எந்தவித பாகுபாடும் இன்றி அனைத்து வங்கிகளையும் ரிசர்வ் வங்கி கண்கானித்து வருகிறது. அப்படி கண்கானிப்பதில் வங்கிகள் ஏதேனும் தவறு செய்தால். அபராதம் உள்ளிட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும்.
ரிசர்வ் வங்கியின் இந்த அதிரடியான நடவடிக்கையால் தான், வங்கி வாடிக்கையாளர்களும் சரி, அதில் பணம் போட்டு இருப்பவர்களும் சரி நிம்மதியாக இருக்க முடிகிறது. முன்னதாக பல வங்கிகள் கண்கானிக்கப்பட்டு, அந்த பிரச்சனைகளை சரி செய்து தற்போது மீண்டும் செயல்பாட்டு வந்துள்ளது. அதற்கு சிறந்த உதாரணம் தான் யெஸ் பேங்க்.
இதற்கிடையில் ஆர்பிஐயின் இந்த அதிரடியான நடவடிக்கையால் கர்நாடக வங்கியின் பங்கு விலையானது 3 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. இதே பேங்க் ஆப் இந்தியா பங்கின் விலையானது 156 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 31.50 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.