இந்திய ரிசர்வ் வங்கி 2022-23 ஆம் ஆண்டில் மட்டும் விதிமுறைகளை மீறியதற்காக வங்கிகள், என்பிஎஃப்சி அமைப்புகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களுக்கு சுமார் 40.39 கோடி ரூபாய் அளவிலான அபராதத்தை விதித்துள்ளது என்று நிதித்துறை இணையமைச்சர் பகவத் காரத் தெரிவித்தார்.
மக்களவையில் திங்கள்கிழமை எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்கப்பட்டது, இந்த அறிக்கையில் ரிசர்வ் வங்கி சுமார் 176 வழக்குகளில் (விதிமீறல்கள் தொடர்பான வழக்கு) கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே ரூ.14.04 கோடி அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்திய சந்தையில் நிதி பாதுகாப்பை மேம்படுத்த ஆர்பிஐ கடுமையான நடவடிக்கையும், ஆய்வுகளையும் அனைத்து நிதி நிறுவனங்களில் கடந்த சில வருடங்களாக நடத்தி வருகிறது. இதில் அதிகமாக விதிமுறைகள் மீறல், நிர்வாக குறைபாடு, மோசமான நிதி நிலைமை ஆகியவற்றை கொண்டு இருந்தது கூட்டுறவு வங்கிகள் தான்.
கூட்டுறவு வங்கிகளுக்கு ரூ.14.04 கோடி அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், தனியார் துறை வங்கிகளுக்கு ரூ.12.17 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.3.65 கோடியும், வெளிநாட்டு வங்கிகள் ரூ.4.65 கோடியும், என்பிஎஃப்சிகள் ரூ.4.39 கோடியும் அபராதமாக செலுத்தியுள்ளன.
வங்கிகள், NBFCகள் மற்றும் HFCக்கள் தங்களுடைய வர்த்தகத்தையும், நிதி ஆதாரத்தையும் எப்படி கையாள வேண்டும், நியாயமான நடைமுறைகள் குறித்த வழிகாட்டுதல்களை ஆர்பிஐ வெளியிட்டது. இதில் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் கடன் வழங்குதலின் பல்வேறு அம்சங்களையும் உள்ளடக்கியது.
More From GoodReturns

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

ஏஐ தொழில்நுட்பத்தின் கோரமுகம்.. Adode சிஇஓ சாந்தனு நாராயண் வெளியேற்றம்..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!



Click it and Unblock the Notifications