இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் ஒழுங்குமுறை அமைப்பாக செயல்படுகிறது. வங்கிகள் விதிமுறைகளுக்கு இணங்க செயல்படுகிறதா, அவற்றின் கணக்குகள் முறையாக உள்ளதா என்பதை ரிசர்வ் வங்கி அடிக்கடி ஆய்வு செய்து கண்காணித்து வருகிறது. இதனால்தான் நம் நாட்டில் நிதித் துறை சிறப்பாக செயல்படுகிறது.
கண்காணிப்பு
அதேசமயம் என்னதான் ரிசர்வ் வங்கி வங்கிகளை கண்காணித்தாலும் சில சமயங்களில் சில வங்கிகள் விதிமுறைகளுக்கு இணங்காமல் செயல்படுகின்றன மற்றும் விதிமுறைகளுக்கு புறம்பாகவும் செயல்படுகின்றன. ஆனால் இறுதியில் ரிசர்வ் வங்கியிடம் மாட்டி கொள்கின்றன. தவறு செய்யும் வங்கிகளுக்கு எதிராக அபராதம் விதிப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி எடுக்கிறது.

தற்போது சில ஒழுங்குமுறை விதிமுறைகளை பின்பற்றாததற்காக டாய்ச் பேங்க் ஏஜி இந்தியா மற்றும் யெஸ் வங்கிக்கு இந்திய ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது. டாய்ச் பேங்க் ஏஜி இந்தியாவுக்கு ரிசர்வ் வங்கி ரூ.50 லட்சம் அபராதம் விதித்துள்ளது. வங்கிகள் முழுவதும் பெரிய கடன்கள குறித்த மத்திய தகவல் களஞ்சியத்தை உருவாக்குதல் குறித்த சில வழிகாட்டுதல்களை பின்பற்றாததற்காக டாய்ச் பேங்க் ஏஜி இந்தியாவுக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது.
விதிமீறல்
மற்றொரு விதிமீறல் விவகாரத்தில் யெஸ் வங்கிக்கு இந்திய ரிசர்வ் வங்கி ரூ.29.60 லட்சம் அபராதம் விதித்துள்ளது. நிதி அறிக்கைகள் வழங்குதல் மற்றும் வெளிப்படுத்தல்கள் குறித்து தனது சில வழிகாட்டுதல்களை பின்பற்றாததற்காக யெஸ் வங்கிக்கு ரூ.29.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்த இரண்டு நிகழ்வுகளிலும், ஒழுங்குமுறை இணக்க குறைபாடுகள் அடிப்படையாக கொண்டு அபராதங்கள் விதிக்கப்படுகிறது. வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுடன் செய்து கொண்ட எந்தவொரு பரிவர்த்தனைகள் அல்லது ஒப்பந்தத்தின் செல்லுபடித்தன்மையையும் தீர்ப்பதற்காக அல்ல. அபராதம் விதிப்பது வங்கிகளுக்கு எதிராக ரிசர்வ் வங்கியால் எடுக்கப்படக்கூடிய வேறு எந்த நடவடிக்கைக்கும் எந்தவித பாரபட்சமும் இல்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
சந்திப்பு
மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகம் முடிவடைந்த போது, யெஸ் வங்கி பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.14 சதவீதம் உயர்ந்து ரூ.21.54ஆக இருந்தது. இந்திய ரிசர்வ் வங்கி அடுத்த வாரம் வங்கி தலைவர்களை சந்தித்து பேச உள்ளது. அப்போது, நிதி அமைப்பில் நிதியை நிர்வகிக்கும் விதத்தில் சாத்தியமான மாற்றங்கள் குறித்து அவர்களுடன் ரிசர்வ் வங்கி விசாரிக்கும்.
ஏனென்றால், தனது வட்டி விகித முடிவுகள் பரந்த பொருளாதாரத்திற்கு திறம்பட நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய ரிசர்வ் வங்கி முயற்சி செய்கிறது என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. சமீபத்தில் நியமிக்கப்பட்ட துணை கவர்னர் பூனம் குப்தா உள்பட இந்திய ரிசர்வ் வங்கியின் மூத்த அதிகாரிகள் மே 21ம் தேதியன்று வங்கி நிர்வாகிகளை சந்திப்பார்கள் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications