இந்திய ரிசர்வ் வங்கி அவ்வப்போது விதிமுறைகளை மீறும் வங்கிகளுக்கு அபராதம் விதித்து வருகிறது என்பதும் அதேபோல் மோசமாக செயல்படும் வங்கிகளுக்கு கட்டுப்பாடு விதித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் நான்கு கூட்டுறவு வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த நான்கு வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தங்களுடைய டெபாசிட் பணத்தை எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
நான்கு கூட்டுறவு வங்கிகள்
இந்திய ரிசர்வ் வங்கி நான்கு கூட்டுறவு வங்கிகளுக்கு ஒருசில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சாய்பாபா ஜனதா சககாரி வங்கி, தி சூரி நண்பர்கள் யூனியன் கூட்டுறவு வங்கி லிமிடெட், சூரி (மேற்கு வங்கம்) மற்றும் தேசிய நகர்ப்புற கூட்டுறவு வங்கி லிமிடெட், பஹ்ரைச் ஆகிய நான்கு கூட்டுறவு வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
பணம் எடுக்க கட்டுப்பாடுகள்
இந்த நான்கு வங்கிகளின் மோசமான நிதி நிலைகளை கருத்தில் கொண்டு, சாய்பாபா ஜனதா சககாரி வங்கியில் இருந்து வாடிக்கையாளர்கள் ரூ. 20,000 மட்டுமே பணம் எடுக்க ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது. அதேபோல் தி சூரி பிரண்ட்ஸ் யூனியன் கூட்டுறவு வங்கியில் இருந்து ரூ. 50,000 பணத்தை வாடிக்கையாளர்கள் எடுத்து கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. மேலும் தேசிய நகர்ப்புற கூட்டுறவு வங்கியில், ஒரு வாடிக்கையாளருக்கு பணம் எடுக்கும் வரம்பு ரூ.10,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆறு மாதங்கள் தொடரும்
வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949ன்படி ரிசர்வ் வங்கியின் இந்த கட்டுப்பாடுகள் ஆறு மாதங்களுக்கு தொடரும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆறு மாதங்களுக்கு பின் இந்த வங்கிகளின் செயல்முறைக்கு ஏற்ப கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம் என தெரிகிறது.
ரூ.57.75 லட்சம் அபராதம்
மேலும் கூட்டுறவு வங்கிகள் மீதான கட்டுப்பாடுகள் குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் 'வணிக வங்கிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட எஃப்ஐக்கள் மூலம் மோசடிகள் வகைப்படுத்துதல் மற்றும் அறிக்கையிடல்' தொடர்பான விதிகளை மீறியதற்காக சூர்யோதாய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிக்கு ரூ.57.75 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications