மும்பை: இந்திய ரிசர்வ் வங்கியில் துணை ஆளுநர் பொறுப்புக்கு பொறுப்பு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருக்கக்கூடிய மைக்கேல் பத்ராவின் பதவிக்காலம் வரும் ஜனவரி 15ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இதனை அடுத்து அந்த பதவி காலியாவதாகவும் அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நவம்பர் 4ஆம் தேதியிட்டு ரிசர்வ் வங்கி சார்பில் இது தொடர்பான விளம்பரம் வெளியாகி உள்ளது. இதன்படி ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் பொறுப்புக்கான தகுதிகளும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

என்னென்ன தகுதிகள்?: வரும் 15.1.2025 ஆம் தேதி அன்று 60 வயதுக்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
பொது நிர்வாகத்தில் அரசிலோ அல்லது செயலாளர் அளவிலோ குறைந்தது 25 ஆண்டுக்கால அனுபவம் கொண்டிருக்க வேண்டும் அல்லது இந்தியா அல்லது சர்வதேச பொது நிதி நிறுவனங்களில் குறைந்தது 25 ஆண்டுக்கால அனுபவம் வேண்டும் அல்லது தேசிய அல்லது சர்வதேச அளவில் மிகப்பெரிய மெரிட் அல்லது டிரேக் ரெக்கார்ட் வைத்திருக்க வேண்டும்.
மாத சம்பளம்: இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் பதவிக்கு மாத சம்பளம் 2,25,000 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவிக்காலம்: இந்த பதவிக்காலம் மூன்று ஆண்டுகளுக்கு இருக்கும் என்றும் தேவைப்பட்டால் நீட்டிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி தேதி: துணை ஆளுநர் பதவிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதியாக நவம்பர் 30ஆம் தேதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து நிரப்பி ஒரு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் பிற விவரங்கள் மற்றும் மூன்று ரெஃபரன்ஸ்களோடு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த https://financialservices.gov.in/ மற்றும் https://rbi.org.in/ இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தற்போது இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருக்கக்கூடிய மைக்கேல் பத்ரா ஒரு பொருளாதார நிபுணர் ஆவார். இவர் 1985ஆம் ஆண்டு முதல் ரிசர்வ் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். மேலும் இவர் நிதி கொள்கை குழுவின் உறுப்பினராகவும் செயல்பட்டு வந்தார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இவர் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். 2023 ஆம் ஆண்டிலேயே இவரது பதவிக்காலம் முடிவடைந்தது, இருந்தாலும் அடுத்த ஓராண்டு காலத்திற்கு இவரது பதவி நீட்டிக்கப்பட்டது. ஐஐடி மும்பையில் பொருளாதாரப் பிரிவில் பிஎச்டி படிப்பை முடித்தவர் சர்வதேச நாணய நிதியத்தில் இந்தியாவுக்கான மூத்த ஆலோசகராக இவர் பணியாற்றியுள்ளார்.
இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் பொறுப்பு என மிகவும் முக்கியமானது என்பதால் மிகவும் கவனத்துடனே அந்த பதவிக்கான நபர் தேர்வு செய்யப்படுவார்.
More From GoodReturns

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!



Click it and Unblock the Notifications