விலை மதிப்புள்ள நகைகள், முக்கியமான ஆவணங்களை வீட்டில் வைத்திருப்பதைக் காட்டிலும் வங்கி சேப்டி லாக்கர்களில் வைப்பது மிகவும் பாதுகாப்பான விஷயமாகும்.
ஆனால் லாக்கர்களைப் பயன்படுத்தும் முன்பாக அது குறித்த விதிமுறைகளை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். வங்கி பாதுகாப்பு லாக்கர்கள் பற்றி இந்திய ரிசர்வ் வங்கி புதிதாக பல்வேறு விதிமுறைகளை உருவாக்கியுள்ளது. இந்த விதிகளை வங்கிகளும் லாக்கர் வைத்திருப்பவர்களும் கவனமாகப் பின்பற்ற வேண்டியது அவசியம்.

முறையற்ற வகையில் லாக்கர்களை கையாளுவதற்கு வாடிக்கையாளர்களுக்கு அனுமதி இல்லை. லாக்கர்கள் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டால் அவை காலியாக இருக்கும் பட்சத்தில் அவற்றை வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் ஒதுக்க வேண்டும். காலியாக உள்ள லாக்கர்கள் விவரத்தை வங்கிகள் அறிந்து கொண்டு அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு தெரியும் வகையில் நோட்டீஸ் போர்டில் அறிவிக்க வேண்டும்.
சேப் டெபாசிட் லாக்: ஆகஸ்ட் 2022இல் ரிசர்வ் வங்கி சேப் டெபாசிட் லாக்குகள் பற்றி புதிய விதிகளை அறிவித்தது. இதன்படி இப்போதுள்ள லாக்கர் ஹோல்டர்களுடனான ஒப்பந்தத்தை 2023 ஜனவரி 1க்குள் புதுப்பிக்க வேண்டும்.
புதிய விதிகளின்படி காலியாக உள்ள லாக்கர்கள் பட்டியலையும் காத்திருப்போர் பட்டியலையும் வெளியிட வேண்டும் என வங்கிகளுக்கு விதிக்கப்பட்டுள்ளது. இத்துடன் லாக்கர் ஒதுக்கும்போது அதிகபட்சம் மூன்று வருடத்துக்கான லாக்கர் வாடகையை வாடிக்கையாளர்களிடம் இருந்து வங்கிகள் வசூலிக்கலாம்.
ரிசர்வ் வங்கி சீரமைத்துள்ள விதிகளின்படி வங்கிகள் தரும் லாக்கர் ஒப்பந்தத்தில் முறையற்ற விதிகள் இடம் பெறக்கூடாது. இதன்மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஏதாவது இழப்பு ஏற்பட்டால் இதிலிருந்து வங்கிகள் தப்பிக்க முடியாது.
புதிய விதிகளின்படி லாக்கர்களில் எந்த மாதிரியான பொருட்களை வைக்கலாம், வைக்கக்கூடாது என்பது பற்றி ஒப்பந்தத்தில் குறிப்பிட வேண்டும். வாடிக்கையாளர்கள் நகைகள், முக்கிய ஆவணங்கள், சட்டப்படியான பொருட்களை மட்டுமே வங்கி லாக்கர்களில் வைக்க வேண்டும். வங்கி லாக்கர்களை சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்கள் மட்டுமே அணுக முடியும். அவரது குடும்ப உறுப்பினரோ அல்லது வேறு யாருமோ லாக்கரை திறக்க அனுமதியில்லை.
ஆயுதங்கள், பணம், வெளிநாட்டு கரன்ஸிகள், மருந்துகள், விஷத்தன்மையுள்ள பொருட்கள் இந்த லாக்கர்களில் வைக்கக் கூடாது. லாக்கரில் பணம் வைக்கப்பட்டு மாயமானால் அதற்கு வங்கிகள் பொறுப்பு ஏற்காது.
லாக்கர் வைத்திருப்பவர் யாரையாவது நாமினியாக நியமித்திருந்தால் அவரது மரணத்துக்குப் பின் நாமினி அந்த லாக்கரைத் திறப்பதற்கு அனுமதி உண்டு. நாமினி பற்றிய விவரங்களை வங்கிகள் நன்கு விசாரித்து அறிந்த பின்னர் லாக்கரை திறக்க நாமினிக்கு அனுமதி தரப்படும்.
Story written by: Jayachandran
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications