ரிசர்வ் வங்கி இன்று முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியை வெளியிட்டு அசத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ரிசர்வ் வங்கி அரசு பத்திரங்களில் முதலீடு செய்யும் Retail Direct Scheme தளத்திற்கு மொபைல் செயலியை விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்த மொபைல் செயலி மூலம், முதலீட்டாளர்கள் மத்திய அரசு பத்திரங்கள், மாநில அரசு பத்திரங்கள், ட்ரஷரி பத்திரங்கள் போன்ற பல்வேறு அரசாங்க கடன் பத்திரங்களில் ஒரு ரீடைல் முதலீட்டாளர் எளிதாக முதலீடு செய்ய முடியும்.

தற்போது, இந்த அரசாங்க கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய, முதலீட்டாளர்கள் இணையதளத்தில் (website) மட்டுமே உள்ளதால், இதை மக்களின் இன்றைய முதலீட்டு பழக்கத்திற்கு எளிமையாக்கும் வகையில் மொபைல் செயலி வாயிலாக கொண்டு வர ஆர்பிஐ முடிவு செய்துள்ளது.
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று மக்களிடம் நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகளை வெளியிடும் போது பேசும் போது, "ரிசர்வ் வங்கி Retail Direct Scheme, 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இத்தளத்தை அணுகுவதற்கான மொபைல் செயலியை இப்போது அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது சிறு முதலீட்டாளர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும் மற்றும் அரசாங்க கடன் பத்திர சந்தையை விரிவுபடுத்தும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட ரிசர்வ் வங்கியின் Retail Direct Scheme , ஒரு தனிப்பட்ட முதலீட்டாளர்கள் ரிசர்வ் வங்கியில் gilt கணக்குகளை (gilt accounts) உருவாக்கி அரசாங்க கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதற்கான வசதியை வழங்குகியது.
இந்த திட்டம் முதலீட்டாளர்கள் ப்ரைமரி ஏலங்களில் பத்திரங்களை வாங்குவதற்கும், NDS-OM தளம் வழியாக பத்திரங்களை வாங்க/விற்பதற்கும் அனுமதிக்கிறது.
இந்த செயல்முறையை எளிதாக்குவதற்காக, ரிசர்வ் வங்கி நேரடி முதலீட்டு திட்ட இணையதளத்திற்கான மொபைல் செயலி வடிவத்தை உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த செயலி மூலம், முதலீட்டாளர்கள் தங்களின் வசதிக்கேற்ப, எந்த இடத்திலிருந்தும் பத்திரங்களை வாங்கவும், விற்பனை செய்யவும் முடியும். இந்த மொபைல் செயலி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்றும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
முக்கிய நன்மைகள்: இந்த மொபைல் செயலி மூலம், முதலீட்டாளர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலிருந்தும் அரசாங்க கடன் பத்திரங்களில் முதலீடு செய்யலாம். இணையதளம் இத்தகைய சேவையை வழக்காது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications