இந்தியாவில் மூலை முடுக்கெங்கும் யுபிஐ பண பரிவர்த்தனை பரவி இருக்கிறது. மக்கள் ஒரு ஐந்து ரூபாய் பணம் செலுத்துவதாக இருந்தால் கூட அதனை யுபிஐ வாயிலாக தான் செலுத்துகிறார்கள். எங்கு சென்றாலும் கையில் பணத்தை கொண்டு செல்ல வேண்டிய தேவையில்லை , மொபைல் போனும் யுபிஐ செயலியும் இருந்தால் போதும் எளிதாக நாம் பணம் அனுப்பி விட முடியும்.
பணம் அனுப்புவது எப்படி எளிமையாகிவிட்டதோ அதே போல யுபிஐ பண பரிவர்த்தனை நடைமுறையில் பல்வேறு மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இந்த மோசடிகளை தடுக்கும் விதமாக இந்திய ரிசர்வ் வங்கி ஒரு புதிய விதியை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த விதிமுறை வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வருகிறது.

ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து நம்முடைய யுபிஐ, கார்டு மற்றும் வாலெட் பேமென்ட்கள் கூடுதல் பாதுகாப்பு கொண்டவையாக மாற இருக்கின்றன. அதாவது டிஜிட்டல் பேமென்ட்களுக்கு இரண்டு அங்கீகார சரிபார்ப்பு கட்டாயமாக்கப்படுகிறது. இது நாள் வரை டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் தர ஓடிபி உள்ளீடு செய்தாலே போதும். ஆனால் இனி ஓடிபி மட்டும் போதாது ஒவ்வொரு பண பரிவர்த்தினையும் இரண்டு முறை நாம் சரி பார்க்க வேண்டியதாக இருக்கும்.
இதனை two factor authentication என அழைக்கிறார்கள். அதாவது ஒன்று ஓடிபி மற்றொன்று பின் நம்பர், பாஸ்வேர்டு, பயோமெட்ரிக் போன்றவற்றை நாம் கொடுக்க வேண்டியது இருக்கும். அதாவது நம்முடைய பண பரிவர்த்தனைக்கு இரண்டு அடுக்கு பாதுகாப்பு போடப்படுகிறது. மோசடியாளர்கள் நமக்கே தெரியாமல் நம் கணக்கிலிருந்து பணத்தை கொள்ளை அடிப்பதை தடுக்கும் விதமாக இந்த இரண்டு முறை அங்கீகார சரிபார்ப்பு என்பது நடைமுறைக்கு வருகிறது.
தற்போது ஓடிபி மட்டும் கொடுத்தாலே நம்முடைய வங்கி கணக்கில் இருந்து பணம் மற்றொரு வங்கி கணக்கு போய்விடுகிறது. ஆனால் மோசடியாளர்கள் நம்முடைய போனை ஹேக் செய்வதன் மூலம் நமக்கே தெரியாமல் நம்முடைய போனுக்கு எஸ்எம்எஸ் வரவழைத்து நமக்கே தெரியாமல் அந்த ஓடிபி எடுத்து பயன்படுத்தி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து விடுகிறார்கள். அது இனிமேல் நடக்காது.
இதன்படி ஒரு ஓடிபி இரண்டாவதாக பின் நம்பர் அல்லது கைவிரல் ரேகை போன்ற பயோமெட்ரிக் தரவுகளை நாம் வழங்க வேண்டியதிருக்கும். இதன் மூலம் ஆன்லைன் பேமென்ட்கள் மிகவும் பாதுகாப்பானதாக மாறும். அடுத்த வாரத்தில் இருந்து இது நடைமுறைக்கு வருவதால் மக்கள் இவற்றை பயன்படுத்தி வங்கி பரிவர்த்தனைகளை இன்னும் பாதுகாப்பானதாக மாற்றி கொள்ளலாம்.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications

