இந்தியாவின் முக்கிய வங்கிகளில் ஒன்று ரிசர்வ் வங்கி ஆஃப் இந்தியா (RBI). இது நாட்டின் பொருளாதார நிலையை கட்டுப்படுத்தும் முக்கிய பொறுப்பை செய்கிறது. வங்கி வட்டி விகிதங்கள், பணவீக்கம் மற்றும் சந்தை நிலவரங்களைக் கண்காணிப்பதன் மூலம் பொதுமக்களின் நலன்களைப் பாதுகாப்பதே இதன் முக்கிய பணியாகும்.
இந்த சூழலில், ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ள RBI-யின் பணவியல் கொள்கை கூட்டத்திலே 25 அடிப்படை புள்ளிகள் (0.25%) வட்டி விகிதம் குறையும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர். இது இந்திய பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களுக்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு முக்கிய முடிவாகும்.

தற்போதைய பொருளாதார சூழலைப் பார்க்கும்போது, வட்டி விகிதம் குறைவதற்கான முக்கிய காரணம், உள்நாட்டு பணவீக்கம் குறைவாக உள்ளதே ஆகும். கடந்த சில மாதங்களாக இந்தியாவில் விலைவாசி குறைந்து வருகிறது. பிப்ரவரி மாதம் சில்லறை பணவீக்கம் 3.61% ஆக குறைந்தது. இது ஜனவரி மாதத்தின் 4.26% ஐ விட குறைவாகும். RBI வங்கி, இதற்கும் முன்பு பிப்ரவரி மாதத்தில் வட்டி விகிதத்தை 25 புள்ளிகள் குறைத்து 6.25% ஆக அறிவித்திருந்தது. தற்போது அது மேலும் 6% வரை குறையும் வாய்ப்பு உள்ளது.
இப்போது உலகம் முழுவதும் வர்த்தக சந்தையில் மிகுந்த குழப்ப நிலை இருக்கிறது. அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையே வரி போர் (Tariff War) ஏற்படுவதால் உலக வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னிச்சையான வரி விதிப்புகளால் உலகம் முழுவதும் சந்தை நிலைகள் மிகுந்த தாக்கம் அடைந்துள்ளன.
இந்த சூழலில், இந்தியாவின் முக்கிய வங்கியான RBI, வட்டி விகிதத்தை குறைக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். காரணம், இதுவொரு நேரடி பாதிப்பு கொண்ட முடிவாக இருக்கும். அதே நேரத்தில், இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு இது தேவையான ஒன்றாகும்.
வட்டி விகிதம் குறைக்கப்படும் என்றாலும் RBI தனது பணவியல் கொள்கையில் நடுநிலை (Neutral Stance) அல்லது சலுகை நிலை (Accommodative Stance) எது என்பதை முடிவு செய்ய வேண்டியுள்ளது. நடுநிலை என்றால் தேவையான போது வட்டி விகிதத்தை உயர்த்தலாம் அல்லது குறைக்கலாம் என்ற வகையில் சுதந்திரமாக இருக்கும் நிலை.
சில நிபுணர்கள் RBI நடுநிலை போக்கைத் தொடரும் என கருதுகின்றனர். காரணம், உலக சந்தை நிலைமைகள் மிகவும் குழப்பமானதாக உள்ளதால், வங்கி விரைவாக எந்த ஒரு தீர்மானத்தையும் எடுக்காது. இன்னும் சிலர் RBI சலுகை நிலையை அறிவிக்கலாம் என நம்புகின்றனர். இதன் மூலம், எதிர்காலத்தில் தொடர்ந்து வட்டி விகிதம் குறைக்கும் எண்ணம் இருப்பதாக பொதுமக்களுக்கும் சந்தைக்கும் ஒரு தெளிவை வழங்கலாம்.
RBI சந்தையில் பணப்புழக்கத்தை அதிகரிக்க ஏற்கனவே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதில் திறந்த சந்தை செயல்பாடுகள் (Open Market Operations), பணப்புழக்க ஒதுக்கீடு விகிதம் குறைப்பு (CRR Cut), டாலர்-ரூபாய் பரிவர்த்தனை (Dollar-Rupee Buy-Sell Swap) ஆகிய இந்த செயல்பாடுகள் சந்தையில் வட்டி விகிதத்தை குறைக்க உதவியுள்ளது. இருப்பினும், உலகளாவிய நிலைமைகள் மற்றும் அமெரிக்காவின் நடவடிக்கைகள் எப்போது எந்த முடிவை எடுக்கும் என்பது தெரியாத சூழ்நிலையில், RBI நல்ல யோசனையுடன் முன்னேறுகின்றது. ஏப்ரல் மாதத்திற்கான கூட்டத்தில் வட்டி விகிதம் 0.25% குறைவது உறுதி என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், RBI தனது நிலைப்பாட்டை மாற்றி சலுகை நிலையை அறிவிக்குமா அல்லது நடுநிலையிலேயே தொடருமா என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.
இந்த முடிவு, வீட்டு கடன், வாகன கடன், கல்விக் கடன் உள்ளிட்ட வற்றில் வட்டி விகிதத்தை குறைக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதன் மூலம் பொதுமக்களுக்கு நன்மை ஏற்படும். அதே சமயம், வங்கி சேமிப்பில் வட்டி குறையும் வாய்ப்பும் உள்ளது. இந்த முடிவு, தனியார் மற்றும் அரசு வங்கிகளின் வட்டி விகிதங்களில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், மக்கள் ஆர்வத்துடன் இந்த முடிவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications