நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி விகிதம் 9.5% வீழ்ச்சி காணலாம் என்று ரிசர்வ வங்கி கூட்டத்தில் கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பொருளாதார வளர்ச்சி குறித்தான நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஜிடிபி விகிதம் சரியலாம். எப்படி எனினும் அடுத்து வரும் நான்காவது காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி காணலாம் என்றும் தாஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸூடன் இந்தியா போராடி வரும் நிலையில், இந்தியாவின் பொருளாதாரம் ஒரு தீர்க்கமான கட்டத்தில் நுழைகிறது. கிராமப்புற பொருளாதாரம் நெகிழ்ச்சியுடன் காணப்படுகின்றது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வளர்ச்சி விகிதம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவு மோசமான நிலையை கண்டது. எனினும் தற்போது நாடு தழுவிய லாக்டவுனில் படிப்படியாக தளர்வுகளை அளித்து வருகின்றது. இதன் காரணமாக இனி வரும் காலாண்டுகளில் வளர்ச்சி விகிதம் சற்றே மேம்படலாம். எப்படி இருப்பினும் நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி விகிதம் 9.5% சரியலாம் என்றே மதிப்பிடப்பட்டுள்ளது. இது ரிசர்வ் வங்கி வங்கி மட்டும் அல்ல, மற்ற மதிப்பீட்டு நிறுவனங்களும் சரியலாம் என்று கணித்து வருகின்றன.
தற்போது பொருளாதார வளர்ச்சியினை கருத்தில் கொண்டு, லாக்டவுனில் சற்று தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும், வளர்ச்சி மிக மெதுவாகவே காணப்படுகிறது.
நிபுணர்கள் இந்த வீழ்ச்சியானது கொரோனாவின் காரணமாக மட்டும் அல்ல, கொரோனாவிற்கு முன்பே பொருளாதாரம் கடுமையான சரிவினைக் கண்டுள்ளது. எனினும் கடந்த மே மாதத்தில் இந்திய அரசு பொருளாதாரத்தினை ஊக்குவிக்கும் பொருட்டு, 20 லட்சம் கோடி ரூபாய் நிதி ஊக்கத்தினை கொடுத்தது. ஆனால் இந்தியாவுக்கு குறைந்தபட்சம் 2 லட்சம் கோடி ரூபாயாவது நிதி ஊக்கத்தினை கொடுக்க வேண்டியிருக்கும். ஆக அரசின் கூடுதலான ஊக்கத்தொகையானது, ஆழ்ந்த வீழ்ச்சியில் இருந்து இந்தியாவினை காப்பாற்றும். எனினும் அரசாங்கத்தின் பலவீனமான நிதியினையும் மதிப்பீட்டு நிறுவனம் எச்சரித்தன.
இதற்கிடையில் தான் தற்போது ஆர்பிஐ வட்டி விகிதத்தில் ஏதும் மாற்றம் செய்யவில்லை. இது 4%மாகவே உள்ளது. இதே போல ரிவர்ஸ் விகிதத்தினையும் மாற்றம் செய்யவில்லை.