ஆர்பிஐ நாணய கொள்கை கூட்ட அறிவிப்பு இன்று காலை வெளியாக உள்ள நிலையில், 0.35% முதல் 0.50 சதவீதம் வரை ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க ஃபெடரல் வங்கி உள்ளிட்ட பல வெளிநாட்டு மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தைத் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன.
செப்டம்பர் 28-ம் தேதி முதல் 30-ம் தேதி வரையில் நடைபெற்று வந்த நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் இன்று காலை அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.
ரெப்போ வட்டி விகிதம்
இப்போது ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதம் 5.40 சதவீதமாக உள்ளது. ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 5.15 சதவீதமாக உள்ளது. ரெப்போ வட்டி என்றால் ஆர்பிஐயிடம் இருந்து வங்கிகள் பெற்ற கடனை திருப்பி செலுத்துவதற்கான வட்டி விகிதம் ஆகும். ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் என்றால் வங்கிகளிடம் இருந்து ஆர்பிஐ பெற்ற கடனுக்கான வட்டி விகிதம் ஆகும்.
ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்தால் என்ன ஆகும்?
ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்தால் சாமானிய மக்கள் வங்கிகளில் வாங்கிய கடன் திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயரும். அதே நேரம் பிக்சட் டெபாசிட் உள்ளிட்ட சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் அதிகரித்து முதலீட்டாளர்களுக்கு அதிகம் லாபத்தை வழங்கும். எனவே ரெப்போ வட்டி விகிதம் அறிவிப்பு மீது மக்கள் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.
மோர்கன் ஸ்டான்லி
ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் உயர்த்தி 5.9 சதவீதமாக அறிவிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக மோர்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதம் பணவீக்கம் 7.1 முதல் 7.4 சதவீதமாக இருக்கும் எனவும் மோர்கன் ஸ்டான்லி கனித்துள்ளது. இதுவே 2023, ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் 6 சதவீதமாக குறையலாம் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.
வர்த்தக பற்றாக்குறை
ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வர்த்தக பற்றாக்குறை 10 வருடங்கள் இல்லாத அளவிற்கு அதிகமாக உள்ளது. இந்தியாவின் மொத்த ஜிடிபியில் 5 சதவீதமாக உள்ளது எனவும் தரவுகள் கூறுகின்றன. டிசம்பர் மாதம் இது 3 சதவீதமாகக் குறையலாம் என மோர்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது.
பங்குச்சந்தை
பங்குச்சந்தைக்கும் வட்டி விகித உயர்வுக்கு மிகப் பெரிய தொடர்பு உண்டு. ஒவ்வொரு முறை ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றி அமைக்கும் போதும் அதன் தாக்கம் பங்குச்சந்தையிலும் பிரதிபலிக்கும். ரெப்போ வட்டி விகித உயர்வால் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கடன்களின் செலவு அதிகரிக்கும். எனவே வட்டி விகித உயர்வின் போது கடனில் செயல்பட்டு வரும் நிறுவனங்களின் பங்குகள் சரிய அதிக வாய்ப்புகள் உண்டு.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications