இந்தியாவின் நிதி நிலை மற்றும் பணப் புழக்கத்தைச் சரி செய்யும் ரிசர்வ் வங்கியின் இரு மாத நாணய கொள்கை கூட்டம் பெரும் எதிர்பார்ப்புகள், கேள்விகளுக்கு மத்தியில் இன்று துவங்கியுள்ளது. 3 நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டம் ஜூன் 2ஆம் தேதி, அதாவது இன்று துவங்கி ஜூன் 4ஆம் தேதி முடிய உள்ளது.
கொரோனா 2வது அலை இந்திய பொருளாதாரத்தைப் பெரிய அளவில் பாதித்துள்ள வேளையில் நாணய கொள்கை கூட்டம் நடை பெற உள்ளது. சமீபத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்துள்ளது, இதன் வாயிலாக ரிசர்வ் வங்கி சில முக்கியமான அறிவிப்புகளை வெளியிடும் எனக் கணிக்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கி நாணய கொள்கை கூட்டம்
இந்த நாணய கொள்கை கூட்டத்தில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றும், இதனால் ரெப்போ விகிதத்தை 4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35 சதவீதம் அளவீட்டைத் தொடரும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
வட்டி விகிதம் குறைப்பு
காரணம் தற்போதைய நாட்டின் வர்த்தகம், பொருளாதாரச் சூழ்நிலையில் வட்டி விகிதத்தைக் குறைத்தாலும் பெரிய அளவிலான நன்மைகள் இருக்காது. இதேபோல் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வட்டி தளர்வுக்கான வளர்ச்சியும், வர்த்தகமும் சந்தை உருவாக்க முடியாமல் கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ளது.
பணவீக்கம் முக்கியப் பிரச்சனை
ஆனால் நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த கட்டாயம் முக்கியமான நடவடிக்கையை ரிசர்வ் வங்கி எடுக்கும் எனவும், இதற்கான அறிவிப்புகள் வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதேபோல் நாட்டின் பணப் புழக்கத்தை அதிகரிக்க முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கவும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.
கடன் சலுகை கிடைக்குமா..?!
மேலும் சாமானிய மக்கள் முதல் பெரும் பணக்காரர் வரையில் அனைத்து தரப்பினரும் கேட்டு வரும் கடனுக்கான ஈஎம்ஐ செலுத்துவதில் சலுகை-க்கு ரிசர்வ் வங்கி ஏற்கனவே அனைவருக்கும் வழங்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
கடன் மறுசீரமைப்புத் திட்டம்
ஆனால் இந்தக் கூட்டத்தின் முடிவில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கடன் மறுசீரமைப்புத் திட்டத்தைக் கூடுதலாக விரிவாக்கம் செய்யச் சில வாய்ப்புகள் உள்ளது, ஆனால் இதை ரிசர்வ் வங்கி அறிவிக்குமா என்பது கேள்விக்குறி தான்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications