இந்திய ரிசர்வ் வங்கி தனது இருமாத நாணய கொள்கை கூட்டத்தை செவ்வாய்க்கிழமை துவங்கியுள்ளது, ஏப்ரல் மாத கூட்டத்தில் ஆர்பிஐ அமெரிக்க மத்திய வங்கியின் முடிவுகளுக்கு ஏற்ப ரெப்போ விகிதத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆர்பிஐ எவ்விதமான மாற்றமும் செய்யாமல் ரெப்போ விகிதம் 6.50% ஆக தொடரும் என அறிவித்தது.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை துவங்கிய இருமாத நாணய கொள்கை கூட்டத்தில் ஆர்பிஐ எத்தகைய முடிவை எடுக்கும் என்பது முக்கிய கேள்வியாக இருக்கும் வேளையில், இதற்கான பதில் கிட்டதட்ட தெரிந்துவிட்டது.

ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு 4.70 சதவீதமாக குறைந்துள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2022-23 ஆம் நிதியாண்டில் 7.2 சதவீதமாக மதிப்பிட்டுள்ளது மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமைச்சகம். 2023 ஆம் ஆண்டு மே மாதத்தில் மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் வருடாந்திர அடிப்படையில் 12 சதவீதம் அதிகரித்து 1.57 லட்சம் கோடியாக உயர்ந்து உள்ளது.
இந்தியாவின் உற்பத்தி PMI குறியீடு எப்போதும் இல்லாத வகையில் 31 மாத உயர்வை மே மாதம் எட்டியுள்ளது. ஏப்ரல் மாதம் 57.2 ஆக இருந்து உற்பத்தி PMI குறியீடு மே மாதம் 58.7 ஆக உயர்ந்து உச்சத்தை தொட்டு உள்ளது. இந்தியாவிலும், உலக நாடுகளிலும் தேவை அதிகரித்த காரணத்தால் இந்தியாவின் உற்பத்தி துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
இப்படி அனைத்து பிரிவுகளிலும் இந்திய பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கு சாதகமாக இருக்கும் வேளையில், இந்த கூட்டத்தில் ரெப்போ விகித்தை உயர்த்த வாய்ப்புகள் மிகவும் குறைவு. இதில் முக்கியமாக பணவீக்கம் தொடர்ந்து குறைந்து வருவதால் ரெப்போ விகிதம் உயர்த்தாமல் இருக்க சாதகமாக சூழ்நிலைகள் உருவாகியுள்ளது.
இந்த நிலையில் ஜூன் 8ஆம் தேதி இருமாத நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகளை ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பார், மேலும் சர்வதேச பொருளாதாரமும் மந்த நிலையில் இருக்கும் காரணத்தால் இந்தியாவில் வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கு வாய்ப்புகள் குறைந்துள்ளது.
MPC கூட்டத்தின் முடிவில் ஆர்பிஐ கவர்னர் 2000 ரூபாய் நோட்டுக்கள் குறித்த அறிவிப்புகள் கட்டாயம் இருக்கும், இதற்கான விளக்கம், இதன் தாக்கம், எதிரொலி குறித்த அறிவிப்பு இருக்கும். முக்கியமாக கிளீன் நோட் பாலிசி குறித்தும் செப்டம்பர் 30க்கு பின்பு 2000 ரூபாய் நோட்டுகளின் நிலை என்ன என்பது குறித்தும் அறிவிப்புகள் இருக்கும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications