RBI Repo Rate: ஆர்பிஐ ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை.. கடன் வாங்கியவர்களுக்கு லாபம்..!

ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டம் முடிவில் மக்களுக்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் சாதகமாக ரெப்போ விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் செய்யாமல் அறிவித்துள்ளது.

இதனால் வங்கியில் கடன் வாங்கிய அனைவருக்கும் தங்களது வட்டி விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் இருக்காது. இதேபோல் வங்கி டெபாசிட் திட்டம் மூலம் வருமானம் பார்க்கும் பலர் நீண்ட காலமாக எதிர்பார்க்கும் வட்டி விகித உயர்வு இந்த நாணய கொள்கை கூட்டத்தில் ஏமாற்றம் அளித்துள்ளது.

மேலும் நாட்டின் பொருளாதாரம் இன்னும் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கையில் தளர்வுகள் நம்பி தான் வளர்ச்சி அடைந்து வருகிறது என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

இந்திய பொருளாதாரம்

இந்திய பொருளாதாரம்

கொரோனா தொற்றுக்கு முன்பே இந்திய பொருளாதாரம் தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், நாட்டின் வர்த்தக வளர்ச்சிக்காக ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என ஆலோசனை செய்து வந்தது. ஆனாஸ் கொரோனா பாதிப்பு இந்த வட்டி குறைப்பைக் கட்டாயமாக்கியுள்ளது.

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

இதன் மூலம் கொரோனா முதல் அலை துவங்கியதில் ரிசர்வ் வங்கி தனது ரெப்போ விகிதத்தைத் தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் வங்கியில் கடன் வாங்கியவர்கள் அனைவரும் வரலாறு காணாத லாபத்தை அடைந்தனர்.

2வது அலைக்குப் பின்

2வது அலைக்குப் பின்

ஆனால் 2வது அலைக்குப் பின்பு நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ள வேளையில் இன்று நடக்கும் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதம் உயர்த்தப்படும் கணிப்புகள் வெளியாகியிருந்தது.

ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை

ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை

ரிசர்வ் வங்கியின் இரண்டு நாள் நாணய கொள்கை கூட்டம் முடிந்த நிலையில் ஆர்பிஐ தனது ரெப்போ விகிதத்தை 4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதத்தை 3.35 சதவீதம் என எவ்விதமான மாற்றமும் இல்லாமல் அறிவித்துள்ளது. இந்த முடிவுக்கு நாணய கொள்கை கூட்டத்தில் 5:1 வாக்குகள் அடிப்படையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

பொருளாதார வளர்ச்சி

பொருளாதார வளர்ச்சி

இதேபோல் இக்கூட்டத்தில் ரிசர்வ் வங்கி 2022ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் 2வது காலாண்டில் 7.9 சதவீதம், 3வது காலாண்டில் 6.8 சதவீதம், 4வது காலாண்டில் 6.1 சதவீதம் வரையில் உயரும் எனக் கணித்துள்ளது.

இதேவேளையில் 2023ஆம் நிதியாண்டில் முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 17.1 சதவீதமாக இருக்கும் கணித்துள்ளது

 

ரிசர்வ் வங்கி கருத்து

ரிசர்வ் வங்கி கருத்து

மேலும் நாட்டின் பொருளாதாரம் இதுநாள் வரையில் நிலையாக இல்லாமல் தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருப்பதால், நாட்டின் வளர்ச்சிக்கு இன்னமும் நாணய கொள்கை தளர்வுகள் தேவைப்படுவதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

 தொடுதல் சார்ந்த வர்த்தகம்

தொடுதல் சார்ந்த வர்த்தகம்

இந்தியாவில் அதிகமானோருக்கு கொரோனா வேக்சின் அளிக்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பினாலும் தொடுதல் சார்ந்த வர்த்தகத் துறைகள் இன்னமும் அதிகளவிலான வர்த்தகப் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது

பணவீக்கம்

பணவீக்கம்

இந்தியாவில் சில்லறை பணவீக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதன் மூலம் 2022ஆம் நிதியாண்டில் நாட்டின் சில்லறை பணவீக்கம் 5.3 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது, இதேபோல் 2வது காலாண்டில் 5.1 சதவீதம், 3வது காலாண்டில் 4.5 சதவீதம், 4வது காலாண்டில் 5.8 சதவீதம் வரையில் உயரும் என ரிசர்வ் வங்கி பணவீக்க அளவீட்டைக் கணித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+