ரிசர்வ் வங்கி எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. கடன் வாங்கியோருக்கு காத்திருக்கும் பிரச்சனை..!

உலகளவில் நிலவி வரும் சவாலான நிலைக்கு மத்தியில் , இந்திய ரிசர்வ் வங்கி கூட்டமானது இன்று நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

இந்த மத்திய வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் 35 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் இன்றைய வட்டி அதிகரிப்பு என்பது சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாமென எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கிடையில் இந்திய சந்தையானது பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகிறது.

பணவீக்க இலக்கு

பணவீக்க இலக்கு

இந்திய ரிசர்வ் வங்கியின் பணவீக்க இலக்கான 2 - 6% மேலாகவே தொடர்ந்து பணவீக்கம் இருந்து வரும் நிலையில், கட்டாயம் இந்த முறையும் வட்டி அதிகரிப்பு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கூட்டத்தில் ரெப்போ விகிதமானது 5.90% ஆக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில்லறை & உணவு பணவீக்கம்

சில்லறை & உணவு பணவீக்கம்

சில்லறை பணவீக்க விகிதமானது கடந்த அக்டோபர் மாதத்தில் 6.77%% ஆக இருந்தது.. இது கடந்த செப்டம்பர் மாதத்தில் 7.41% ஆக இருந்தது. இதே ஆகஸ்ட் மாதத்தில் 7% ஆக இருந்தது. இதே உணவு பணவீக்கமும் தொடர்ந்து மேலாகவே இருந்து வருகின்றது. இது பருவத்தில் அல்லாத மழை காரணமாக விவசாய பயிர்கள்பாதிக்கப்பட்டுள்ளது, அறுவடை பாதிப்பு காரானமாக உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது, இது விலையேற்றத்திற்கும் தூண்டியுள்ளது. இது மேற்கொண்டு பணவீக்கத்தினை தூண்டலாம்.

இன்னும் அதிகரிக்க தூண்டலாம்

இன்னும் அதிகரிக்க தூண்டலாம்

கடந்த ஏப்ரல் 2022 முதல் ரிசர்வ் வங்கியானது 190 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தினை ஏற்றம் செய்துள்ளது. இது இந்த முறையும் தொடர்ந்து அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து பணவீக்கமும் இலக்கிற்கு மேலாக இருந்து வரும் நிலையில், அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கியும் தொடர்ந்து வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றது. இது மேற்கொண்டு வட்டி விகிதத்தினை அதிகரிக்க தூண்டலாம்.

ரூபாய் மதிப்பு அதிகரிக்கலாம்

ரூபாய் மதிப்பு அதிகரிக்கலாம்

ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையானது ரூபாயின் மதிப்பினை அதிகரிக்க தூண்டலாம். இது மேற்கொண்டு இந்திய சந்தையானது உச்சம் தொட மீண்டும் வழிவகுக்கலாம்.

ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் ரிசர்வ் வங்கியானது டிசம்பர் மாதத்தில் 6.15% ஆக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பங்கு சந்தை நிலவரம்?

பங்கு சந்தை நிலவரம்?

தொடக்கத்தில் சற்றே தடுமாற்றத்தில் இருந்த இந்திய சந்தையானது தற்போது மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இதற்கிடையில் சென்செக்ஸ் 34.95 புள்ளிகள் அதிகரித்து, 62,660.46 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. நிஃப்டி 3.25 புள்ளிகள் குறைந்து, 18,637.90 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகின்றது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+