இனி கார், தனி நபர், வீட்டுக் கடன் வட்டி அதிகரிக்கலாம்.. சாமானியர்கள் பாவம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரிசர்வ் வங்கி எதிர்பார்த்தை போலவே ரெப்போ விகிதத்தினை 0.35% அதிகரித்து, 5.9%ல் இருந்து, 6.25% ஆக அதிகரித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் முடிவால் தனி நபர் கடன், வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வட்டி விகிதம் அதிகரித்தால் இதனால் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

'இந்த' வங்கி மீது அபராதம்.. ஆர்பிஐ எடுத்த அதிரடி நடவடிக்கை..! 'இந்த' வங்கி மீது அபராதம்.. ஆர்பிஐ எடுத்த அதிரடி நடவடிக்கை..!

மாத தவணை அதிகரிக்கலாம்

மாத தவணை அதிகரிக்கலாம்

ஆர்பிஐ வங்கியானது அதன் வட்டி விகிதத்தினை 35 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து, 6.25% ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் மாத தவணையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இனி நீங்கள் மாத மாதம் செலுத்தும் மாத தவணை தொகையானது மேற்கொண்டு கூடுதலாக அதிகரிக்க வழிவகுக்கலாம்.

என்ன காரணம்?

என்ன காரணம்?

ரிசர்வ் வங்கியின் இந்த முடிவானது பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வரும் ஒரு நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் பணவீக்கம் குறித்தான கவலைக்கு மத்தியில், இந்த வட்டி அதிகரிப்பானது செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்தே வட்டி விகிதமானது அதிகரித்து வரும் நிலையில், கடந்த செப்டம்பர் மாதத்தில் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து, 5.9% ஆக அதிகரித்துள்ளது.

பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி அதிகரிக்கலாம்
 

பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி அதிகரிக்கலாம்

இந்தியர்கள் மத்தியில் இன்றும் மிக முக்கியமான திட்டங்களில் ஒன்றாக பார்க்கப்படும் பிக்சட் டெபாசிட் திட்டங்கள், இன்றும் நிலையான வருமானம் தரும் திட்டங்களாக பார்க்கப்படுகின்றன. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் கூடுதலான வருமானம் பெறுவார்கள். ஏற்கனவே பல முறை வட்டி விகிதம் அதிகரித்துள்ள நிலையில், சில வங்கிகள் வைப்பு நிதிகளுக்கு வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளன. இது மீண்டும் அதிகரிப்பு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார் கடன், வீட்டுக் கடன், தனி நபர் கடன்?

கார் கடன், வீட்டுக் கடன், தனி நபர் கடன்?

கிறிஸ்துமஸ், புத்தாண்டுகளை முன்னிட்டு கடன்களுக்கான தேவை என்பது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த காலகட்டத்தில் விகிதம் என்பது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது கடன் தேவையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். எப்படியிருப்பினும் இனி புதியதாக கடன் வாங்குவோர், குறிப்பாக கார் கடன், வீட்டுக் கடன், தனி நபர் கடன் என அனைத்துக்கும் வட்டி விகிதத்தினை அதிகரிக்க வழிவகுக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI MPC 2022: What is the problem with increasing RBI repo rate? Will interest rates on loans increase?

As expected, the RBI increased the repo rate by 0.35% to 6.25% from 5.9%. its pull up loan rates in coming days
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X