இந்திய ரிசர்வ் வங்கி தற்போதைய கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையின் கீழ் தனது இறுதி நாணய கொள்கை குழு (MPC) கூட்டத்தை நடத்தி வருகிறது. இக்கூட்டத்தின் முடிவுகள் இன்று வெளியாக உள்ளது. சக்திகாந்த தாஸ் பதவிக்காலம் அடுத்த வாரம் முடிவடைய உள்ளதால், இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இக்கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் 6.5% என்பதில் இருந்து மாறாமல் இருக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படும் நிலையில், சந்தை நிபுணர்கள் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த CRR விகிதம் குறைக்கப்படலாம் என்று அதிகளவில் எதிர்பார்ப்பதாக கூறுகின்றனர்.

இந்தியாவில் தற்போது இறுக்கமான பணப்புழக்க நிலை மற்றும் மந்தமான பொருளாதார வளர்ச்சி குறித்த பிரச்சனைகள் தான் CRR குறைப்புக்கான எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளன. இதேவேளையில் ரெப்போ விகிதத்தை குறைத்தால், நாட்டின் நிதிநிலையில் ஆபத்துகளை உருவாக்கும் காரணத்தால் ரெப்போ விகிதம் குறைக்கப்படாது என்பதை நிபுணர்கள் அடித்து சொல்கின்றனர்.
இந்தியாவின் GDP வளர்ச்சி விகிதம் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் ஏழு காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு 5.4% ஆக குறைந்துள்ளது, இதுதான் கடன் வழங்குவதை அதிகரிக்கவும் மற்றும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்கு சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதற்கான அடிப்படை காரணமாக அமைந்துள்ளது.
CRR என்பது வங்கிகள் தங்கள் வைப்புத்தொகையின் ஒரு பகுதியை RBI உடன் பாதுகாப்பு தொகையாக வைத்திருக்க வேண்டும். இதன் படி தற்போது CRR விகிதம் 4.5% ஆக உள்ளது. RBI கடைசியாக 2020 மார்ச்சில் கொரானா தொற்றுநோயின் போது CRR அளவை குறைத்தது. அதன் பின்பு CRR மூன்று முறை உயர்த்தப்பட்டு உள்ளது கவனிக்க வேண்டியது.
நாட்டின் தற்போது பணபுழக்கத்தில் CRR விகிதம் 25-50 அடிப்படை புள்ளிகள் குறைத்தால், வங்கித் துறைக்கு ரூ.55,000 கோடி முதல் ரூ.1.2 லட்சம் கோடி வரை பணம் உச்செலுத்தப்படும். இதன் மூலம் வங்கிகளால் அதிகப்படியான பணம் கடன் கொடுக்க வழிவகை செய்யும், இதனால் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்.
CRR விகிதம் குறைப்பு என்பது வட்டி விகித மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் இல்லாமல் நாட்டின் பணப்புழக்க பிரச்சனைகளை பூர்த்தி செய்வதற்கான சிறந்த வழியாகும். ரெப்போ விகிதத்தை சரிசெய்வது போலல்லாமல், CRR குறைப்பு மூலம் வங்கிகளுக்கு கடன் வழங்குவதற்கான கூடுதல் நிதி உடனடியாக கிடைக்கு, பொருளாதாரத்தில் நேரடியாக பாசிடிவ் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் நிறைவுறும் நிலையில், அவரது மறு நியமனம் குறித்து மத்திய அரசு இதுவரையில் எவ்விதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை. கடந்த முறை பிரதமர் அலுவலகம் சுமார் 1 மாதம் முன்னரே பதவி காலம் நீட்டிப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டது.
இதனால் சக்திகாந்த தாஸ்-ன் கடைசி MPC கூட்டமாக இது இருக்கும் என்ற கருத்து நிலவுகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications